Thursday, July 30, 2009

இது என் ஐம்பதாவது பதிவு - நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! தமிழ் மணத்திற்கும் நன்றி !!

போகும் தூரம் அதிகம் !


பார்த்து கொண்டதில்லை , பேசிக்கொண்டதில்லை ஆனாலும் நண்பர்கள் நாம்.
நாடுகள் பல கடந்து சென்றாலும் , மாநிலங்கள் பலவானாலும் , ஊர்கள் வேறுபட்டாலும் நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டு தான் இருக்கின்றது !

மத்தியானமும் , சாயங்காலமும் தொட்டுக்கொள்ளும் ஒரு மூன்றாம் மணி வேளையில் நான் தற்செயலாகத்தான் தமிழ்மணம் வலைப்பதிவை பார்த்தேன் . உண்மையில் தமிழில் இப்படி ஒரு வலைப்பதிவு இருப்பதை அப்போதுதான் கண்டுகொண்டேன். அது வரை தமிழில் வெப் துனியா தவிர மற்ற வர இதழ் களின் வலைப்பதிவைத்தான் பார்த்து கொண்டு இருந்தேன். தமிழ் மணத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவே இல்லை ...

இந்த நேரத்தில் எனக்கு முதன் முதலாக பின்னூட்டம் இட்டு எனக்கு பின்தொடர்பவர் வரிசையில் முதலாவதாக வந்து என்னை உற்சாகப்படுத்திய நண்பர் திரு. சுரேஷ் அவர்களுக்கும் அதன் பிறகு வந்த நண்பர் டாக்டர் திரு . தேவன் மாயம் அவர்களுக்கும் மற்றும் இப்படி ஒரு ஊடகத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் தமிழ்மணத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

அதேப்போல் எனக்கு பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும் , தோழியர்களுக்கும் நன்றி நன்றி .

மேலும் அனைத்து ஜாதி , மத , மதமில்லாத , பிரபலமான , பிரபலமில்லாத , இன்றுதான் தமிழ்மணத்தில் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

உலகம் முழுவதும் ஐம்பது நாடுகளில் இருக்கும் தமிழர்களை இந்த ஐம்பதாவது பதிவு சென்று சேர்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இது நான் அடித்திருக்கும் முதலாவது fifty . இன்னும் நான் அதிக fifty களை அடிக்க உங்களின் வாழ்த்துக்களை வேண்டி நிற்கின்றேன்.

விழாக்கால தள்ளுபடி :
இன்று
என்னுடைய ஐம்பதாவது பதிவை முன்னிட்டு நீங்கள் உலகம் முழுவதும் எந்த கடையில் என்ன வாங்கினாலும் அதில் 50% தள்ளுபடி கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தள்ளுபடி கிடைக்காதவர்கள் உடனே எனக்கு பின்னூட்டம் இடவும்.

சூப்பர் தள்ளுபடி :
மேலும் நம் இளைய தளபதியின் ஐம்பதாவது படத்தின் first show first ticket ம் ஐம்பது சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும் என்பதை பெரும் ஆரவாரத்திற்கு இடையில் தெரிவித்து கொள்கிறேன். இதனைப் பற்றி மேலும் அறிய பின்னூட்டம் இடவும்.

கொண்டாட்டம் :
இன்று இரவு எட்டு மணிக்கு என்னுடைய ஐம்பதாவது பதிவை கொண்டாடும் விதமாக டாஸ்மாக கபாலி மற்றும் குவாட்டர் கோவிந்தனின் இன்னிசை கச்சேரி நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பின்னூட்டம் :
இன்று ஒரு பின்னூட்டம் இட்டால் இரண்டு பின்னூட்டம் இலவசம். முந்துங்கள் இந்த சலுகை (மண்டையில் ) ஸ்டாக் உள்ளவரை மட்டுமே !

....

Wednesday, July 29, 2009

தமிழ்மணத்தை ரணகளப் படுத்தும் பத்து விஷயங்கள்



பார்ப்பன்யம் : ஆதரவு -எதிர்ப்பு

பெரிய பதிவர் vs சின்ன பதிவர்

ஓரினசேர்க்கை : ஆதரவு - எதிர்ப்பு

அனானியின் அட்டகாசங்கள் - ஹேக்கர்

விடைபெறுகிறேன் - வேண்டாம்

விடுதலைப்புலிகள் : ஆதரவு - எதிர்ப்பு

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் , இல்லை

மத சம்பந்தமான தீவீர பதிவுகள்

வரதட்சனை கொடுமை சட்டம் 498A

இது தவிர எனக்கு பிடித்த பத்து , பிடிக்காத பத்து
என்று பத்து விதமான பதிவுகள் ( இதையும் சேர்த்துத்தான்)


அடுத்த முறை பத்து பத்தாக பிரித்து எழுத கூடிய பத்து விஷங்களைப் பற்றி எழுதலாம் என உள்ளேன். என்ன சொல்கிறீர்கள் .

அப்புறம் இந்த பதிவு ஒரு குட்டி முக்கியத்துவம் வாய்ந்தது எனக்கு . கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

Monday, July 27, 2009

ஆட்டோக்காரன் !


என்னது ? வடபழனிலேந்து தி. நகர் போவ நூறு ரூபாவா?

என்னப்பா விளையாடுறியா ?

நான் ஒன்னும் விளையாடுல நீதாமா பெட்ரோல் வில தெரியாம இருக்க ?

அதுக்குன்னு இப்படியா ?
துரைசாமி ரோடுல கட் பண்ணி ஆர் 3 போலீஸ ஸ்டேஷன் வழியா போனா தி.நகர் பத்து நிமிஷம்தாம்ப்ப ...

நல்லா வாயிலேயே வழி சொல்றீயே அப்டே போவ வேண்டியது தானே . அப்ப்றம் எதுக்கு ஆட்டோ...

என்னாப்பா ரொம்ப ரூடா பேசற ..

அப்பறம் என்னமா? டி நகர் வரைக்கும் போயிட்டு சும்மாதான திரும்பி வரணும்

உன்ன யாரு சும்மா வர சொல்றது யாரையாவது ஏத்திக்கிட்டு வர வேண்டியதுதானே?

அதெல்லாம் சரிப்பட்டு வராது . .. நீ எவ்ளோ குடுப்ப?

நான் அறுவது ரூவா கொடுக்கறேன் .

தொண்ணுறு ரூபான்னா ஏறு
இல்லனா வேற அட்டோ பாத்துக்கோ என்ற ஆட்டோ காரனின் பதிலால் கோபமுற்ற அம்புஜம்மாள்
ரொம்பதான் எகத்தாளம் இவனுக்கு என்று தனக்குள் முனகிக்கொண்டு
வேறு ஆட்டோவிற்காக ரோட்டை பார்க்கலானாள்.

ச்சே சொல்லிவச்சாபோல ஒன்னு கூட காலியா வரமாட்டேன்குதே ? என பொருமினாள்.

ஆடி தள்ளுபடியில் நேற்று எடுத்த புடவைக்கு ஜாக்கெட் தைக்க வேண்டும்
தவிர பழைய குக்கரை போட்டு விட்டு புதுசு வாங்க வேண்டும்...

நேற்று மீனாவோடு வந்திருந்ததால் அலுப்பு தெரிய விலை ...

பழைய குக்கரை வேறு கையேடு கொண்டு வந்திருந்தாள் .
இப்ப என்ன செய்வது ...

அதே ஆட்டோகாரனிடம் போக வேண்டியது தான் ...

ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

இப்பல்லாம் தி.நகர் -ல சவாரி ஏத்த போலீஸ்காரன் எங்க உட்றான் ...
ஆட்டோ கொஞ்சம் நிக்க கூடாது வெரட்டிகிட்டே இருக்கான்... என ஆட்டோ காரன் பேசிக்கொண்டு வந்தான் .

ஆனால் பேரத்தில் தோற்றுவிட்ட அம்புஜமாளின் காதில் எதுவும் விழவில்லை .

ஆட்டோ கார பயலுகளே ! பகல் கொள்ள தான் அடிக்கிறான்க . என் நினைத்து கொண்டாள்.

போகும் போதே குப்பையா தெருவில் இருந்த டெய்லரிடம் ஜாக்கெட் துணியை
கொடுத்து விட்டு தி.நகர் ரங்கநாதன் தெருவின் ஆரம்பத்தில் இறங்கிக் கொண்டாள் .
ஆட்டோ காரனின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்து இருந்த பணத்தை கொடுத்து விட்டு கோபமாகவே முகத்தை வைத்து கொண்டு சென்றாள்.

பாத்திரக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது .
தான் கொண்டு வந்த பழைய குக்கரை கொடுத்து விட்டு புதிய குக்கரை பாத்து கொண்டிருந்தாள். ஒரு மணி நேர அலசலுக்கு பின்னர் ஒரு குக்கரை வாங்க முடிவு செய்தாள்.
பழைய குக்கருக்குன்டான தள்ளுபடி போக மீத முள்ள பணத்திற்கான
பில் வந்தது . பில்லை கொடுக்க பணத்தை எடுக்க பர்சை பார்க்கும் போதுதான் தெரிந்தது பர்ஸ் இல்லை என்று.

அடக்கடவுளே பர்ஸ் எங்கே போச்சி ?

ஆட்டோவிலே விட்டோமா ? அல்லது வர்ற வழியில கூட்டத்தில அடிச்சிட்டாங்களா ?

டெய்லரிடம் ஜாக்கெட் கொடுக்கும் போது கிழே விழுந்து விட்டதா ?

குழப்பத்தில் மயக்கமே வந்து விடும் போல் இருந்தது.

ஆட்டோவில் இருந்து இறங்கும்போது வைத்திருந்தோமா? இல்லையா ?
என்பதை கணிக்க கடினமாக இருந்தது . மனது முழுவதும் கோபமே
நிறைந்திருந்தால் அப்போது நடந்தவற்றை மனதில் முன்னிறுத்தி பார்க்க முடியவில்லை.
கடையின் கேஷ் கவுண்டரில் இருந்தவனுக்கு அம்புஜமாளின் முகத்தில் இருந்த கலவரம் விஷயத்தை புரிய வைத்திருந்தது .

என்ன மேடம் பில்லு போடுறத்துக்கு முன்னாடி கேஷ் இருக்குதான்னு செக் பண்ணிக்க வேணாமா ? என்றான்.

அம்புஜத்திற்கு கண்ணிற் வெளிவர ஆரம்பித்தது .

ஒரு வேலை கடையில் விழுந்து கிடக்கிறதா ? என்று கீழே குனிந்து தேடி பார்த்துக் கொண்டே நடந்தாள்.

எங்கேயும் கிடைக்காமல் போகவே . தன்னுடைய பழைய குக்கரை வாங்கி கொண்டு அவமானமும், சோகமும் முகத்தில் அப்பிக்கொள்ள என்ன செய்வது என்று நினைத்தவளுக்கு மீனாவிற்கு செல் பண்ணலாம் என்று தோன்றியது.

ஆபீஸில் இருக்கும் கணவனையோ , காலேஜில் இருக்கும் மகனையோ கூப்பிடுவதை விட மீனாவை கூப்பிடுவதுதான் எல்லா வகையிலும் சவ்கரியம் .

ஆனால் அவளும் இன்று வெளியே போவதாக சொன்னாளே என நினைத்தவள் இருந்தாலும் வேறு வழி இல்லாமல் போன் செய்தாள்.

மீனா வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது . அதற்குள் அம்புஜம் நடந்து வெளியே வந்து திநகர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள்.

எப்படிக்கா ஆச்சி ? நீ ரொம்ப ஜாக்கிரதையா இருப்பியே?

ஆட்டோ காரன் மேல இருந்த கோவத்திலே வந்தேன் . கடையில வந்துதான்
பாத்தேன் . பர்ஸ காணல எவ்வளவு அவமானமா போச்சி தெரியுமா ?
பேசாம உன்கூடவே நாளைக்கு வண்டியில வந்திருக்கலாம் .
இப்படி பணத்த தொலைக்க தான் ரொம்ப அவசர பட்டிருக்கேன். என அழுதாள்.

அழாதக்கா ! இப்ப என்ன பண்ணலாம் .

போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா ?

கொடுத்தா மட்டும் எப்படி கண்டு பிடிப்பான் ?
எங்க தொலைஞ்சதுன்னு சொல்லுறது? என புலம்பினாள் .

அக்கா
, நாம இப்ப அந்த டெய்லர்கிட்ட போயி ஒரு வேளை அங்க இருக்குதான்னு பாப்போம் . என்றாள் மீனா .
ஆனால் டெய்லரும் இங்கு விழவில்லை என்று சொன்னான்.

இப்ப என்னக்கா பண்றது ... போலீஸ ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து வைப்போம் வா என்று கூப்பிட்டு போனாள்.

ஹெட் கான்ஸ்டபில் எல்லா விவரங்களையும் கேட்டு விட்டு ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க சொன்னார். கம்ப்ளைன்ட் எழுதி கொடுப்பதில் எந்த பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை என்பதால் பெயருக்கு ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள் .

அம்புஜமாளுக்கு ஆட்டோ காரனை நினைத்தால் இன்னமும் கோபம் கோபமாய் வந்தது. கிளம்பும் போதே தகராறு பண்ணான் காரியமே விடியல என் நினைத்தாள்.

அவர்கள் வெளியே வந்ததும் மீனா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் போது ஒரு ஆட்டோ வந்து நின்றது . அதிலிருந்து அந்த ஆட்டோ டிரைவர் அவசர அவசரமாக இறங்கினான் . அவன் அம்புஜம் இதுவரை திட்டி கொண்டிருந்த டிரைவர் .
என்னமா பர்சு காணலியா ?
பர்ஸ பத்ரமா வச்சிக்க கூடாதா? வண்டியில கிடந்தது . நான் பாத்ததால போச்சி சவாரி ஏர்ரவங்க யாரவது பாத்து இருந்தா அம்ம்புட்டு பணமும் போயிருக்கும் .
உங்களால நான் சவாரிய கூட ஏத்தாம வரேன் .

போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கத்தான் வந்தேன் . என்ன கம்ப்ளைன்ட் கொடுத்திட்டிங்களா என்றான். சரி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்திட்டு கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிடுங்க . நான் வர்ர்றேன் .

என்ன பெட்ரோல் செலவுதான் எனக்கு ? என்று புலம்பிக்கொண்டே ஆட்டோவிடம் சென்றான்.

கொஞ்சம் இருப்பா? என்று சொன்ன அம்புஜம் உள்ளே சென்று கம்ப்ளைன்ட் ஐ வாபஸ் வாங்கி விட்டு வந்தவள் மீனாவிடம் போய் எதோ பேசி விட்டு ஆட்டோ டிரைவரிடம் வந்து வடபழனிக்கு போப்பா என்றாள்.

வரும் போது இதே ஆட்டோவில் இதே ஆட்டோக்காரனை கொள்ளை காரனாய் நினைத்து மனதிற்குள் திட்டிக்கொண்டே கோபமாக வந்தவள், இப்போது அதே ஆட்டோவில் அதே ஆட்டோகாரனை பற்றி பெருமையாக நினைத்து சந்தோஷமாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள் .

...

Saturday, July 25, 2009

முனியம்மா




முனியம்மா வேலைக்கு சென்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகி விட்டது . அதுவும் இல்லாமல் இன்று இடியாய் ஒரு செய்தி அவள் மண்டையை தாக்கியது . அது அவளுக்கு எய்ட்ஸ் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரிவதாக மருத்துவமனையில் கூறியதுதான்.

ஆட்டோ டிரைவரான அவளுடைய கணவன் மாரியப்பன் கடந்த ஆண்டு ஒரு லாரி விபத்தில் பலியாக அது முதல் தனி மரமாய் இருக்க வேண்டிய சுழல் .இந்த சூழலில்தான் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாய் காசிவிசுவநாதன் வீட்டிற்கு செல்லவேண்டி இருந்தது .

காசி விசுவநாதன் அந்த ஊரில் பணக்காரன் மட்டும் அல்ல அரசியல் செல்வாக்கும் கொண்டிருந்தான். வேலைக்கு சென்ற கொஞ்ச நாளிலே காசி விசுவநாதனின் எண்ணம் நன்றாக தெரிய ஆரம்பித்தது . மனைவி இல்லாத நேரங்களில் மிகவும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான் . ஒரு நாள் வெளிப்படையாய் சொல்லியே விட்டான் இங்க பார் நீ இங்க தொடர்ந்து வேல பாக்கனும்னா , அப்படி இப்படி இருந்து தான் ஆகணும் என்கிட்டே வேலை செய்யற எல்லாத்துக்கும் அதான். நீ சின்ன பொண்ணா இருக்கியேன்னு பாக்கறேன் .நீயே விருப்பப்பட்டு வரணும் என்ன புரியிதா என்று கூறினான் .

அடுத்த நாள் முனியம்மா வேலைக்கு செல்ல வில்லை . ஆனால் வீடு தேடி ஆள் வந்தது அம்மா கூப்பிடுகிறார்கள் என்று . இதைப்போல் முனியம்மா நிற்பதும் பிறகு ஆள் வந்து கூப்பிடுவதும் தொடர்ந்தது. ஆனால் இந்த முறை அவன் அவளை பலாத்காரமாய் கற்பழிக்க முயற்சிக்கவே அன்று ஓடி வந்தவள் இனி அங்கு வேலைக்கு செல்லவே கூடாது என நினைத்தாள் .

இதற்கு இடையில் தான் திடீரென உடம்பு ரொம்ப அசதியாகவும் , ஜொரமும் வரவே ஜி ஹெச் சென்று பார்த்த போது அங்கு ரத்தம் பரிசோதித்து பார்த்தவர்கள் இன்று முடிவை சொன்னார்கள் . முதலில் டாக்டர் நீ என்ன செய்கிறாய் , உன் கணவன் என்ன செய்கிறான் என கேட்டு விட்டு அவன் இறந்து விட்டான் என்று சொன்னதும் முனியம்மாவை ஒரு வித அற்பமாய் பார்த்து விட்டு,
ம்மா உனக்கு எய்ட்ஸ் நோயோட அறிகுறி தெரியுது நீ இனிமே ரொம்ப பத்திர மாக நடந்து கொள்ள வேண்டும் . கொஞ்சம் கட்டு பாடொடு வாழ்ந்தால் .... என சொல்லிக்கொண்டு போனார் ஆனால் எதுவும் அவளின் காதில் விழவில்லை . இடியே விழுந்த பின் விளக்கம் கேட்டு என்ன பயன் .

வீட்டுக்கு வந்த பின்பும் முனியம்மாவின் மனது ஒரு சூனியாமாகவே இருந்தது . தன்னுடைய கணவன் மாரியின் மீது தான் ஆத்திரம் வந்தது . தண்ணி அடிப்பதும் பல பெண்களோடு சகவாசம் வைத்திருப்பதும் தான் அவனுடைய அன்றாட வாழ்க்கையின் நெறிமுறையாக இருந்தது. அவன் இருந்த போதுதான் சுகப்பட வில்லை என்றால் செத்தும் கெடுத்து விட்டானே என்கிற கோபம் வந்தது . இந்த கோபம் பொதுப்படையாய் ஆண்கள் மீதே ஏற்பட்டது . இப்படி தன் வாழ்க்கை வீணாகி விட்டதே என நினைத்து படுத்து கொண்டிருந்தாள் .

அப்போது வீட்டு வாசலின் வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தாள். காசி விசுவநாதன் வீட்டில் இருந்து ஆள் வந்திருந்தான் . அம்மா கூப்பிட்டார்கள் என்று சொன்னான்.


இதுவரை கொண்டிருந்த ஆத்திரங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தவளாய் ஒரு முடிவோடுகிளம்பினாள் . அதில் ஒரு பழி வாங்கும் வேகம் இருந்தது.

...

Friday, July 24, 2009

அஜித் , விஜய் -பத்து வித்தியாசங்கள்


இவரு தல
அவரு தள 'பதி

இவரு அடிச்சா கண்ணு இருக்கும் காது இருக்கும் ...உயிரு மட்டும் இருக்காது .
அவரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிரது தெரியும்

இவரோட தீபாவளி படம் சிவகாசியில ரிலிசானது
அவரோட சிவகாசி படம் தீபாவளிக்கு ரிலிசானது

இவரு பில்லா படத்துல அந்த பக்கம் இந்த பக்கம்னு படம் பூரா நடந்துகிடே இருந்தார்
அவரு கில்லி படம் பூரா ஓடிக்கிடே இருந்தார்.

இவரு டான்ஸ் ஆடுனா கை மட்டும் ஆடும்
அவரு டான்ஸ் ஆடுனா கால் மட்டும் ஆடும்

இவரு நெஜமாவே கார் ரேசுல போனாரு
அவரு படத்துல கார் ரேசுல போனாரு

இவரு அமர்க்களமா போக்கிரித்தனம் பண்ணாரு
அவரு போக்கிரியா அமர்க்களம் பண்ணினாரு.

இவரு காதலுக்கு கோட்டை கட்டினாரு
அவரு காதலுக்கு மரியாதை செஞ்சாரு

இவரு காதலித்து கண்ணாலம் பண்ணினாரு
அவரு கண்ணாலம் பண்ணிட்டு காதலிக்கிறாரு .

இவர வச்சி அண்ணன் டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு
அவர வச்சி தம்பி டான்ஸ்மாஸ்டர் படம் இயக்கினாரு.

இன்னமும் சொல்லிக்கிடே போகலாம் ...
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க !

நன்றி: வருத்தப்படாத வாலிபன் M.A.Phd. Msc. Mphil.,












வாசனை - சிறுகதை


நுகர்வோர் கோர்ட்டின் வாயிலில் நம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தார் பஞ்சாமிர்தம். இன்று தான் தீர்ப்பு . தனக்கு எப்படியும் சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்கிற நம்பிக்கை அவரின் முகத்தில் தெரிந்தது .ஒன்றரை வருடமாக நடக்கும் கேஸ் இது. கேசிற்கான காரணம் இதான் .தான் செய்து கொண்ட மூக்கு ஆபரேஷனுக்கு பிறகு பஞ்சமிர்த்த்திற்கு வாசனைகள் எதுவும் நுகர முடிவதில்லை

கடந்த இரண்டு வருடங்களாக மூக்கடைப்பு ,மூக்கடைப்பு என கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் தன் நண்பர் வேதாசலம் மூலமாக கேள்விப்பட்டு சிகிச்சைக்காக குமரன் நர்சிங் ஹோமிங்கிற்கு வந்தார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் மூக்கில் ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்று சொன்னதால் பஞ்சாமிர்தமும் ஆபரேஷன் செய்து கொண்டார் . ஆபரேஷன் செய்த சில நாட்களில் அவரருக்கு வாசனையை அறியும் சக்தி இழந்து போனதை உணர ஆரம்பித்தார் .

சாப்பாட்டின் வாசனை , ஊது பத்தி , சோப்பு, சென்ட் எதுவும் மூக்கில் எந்த சலனத்தையும் ஏற்படுத்த வில்லை. ஆபரேஷன் செய்த டாக்டர்ரை சந்தித்தபோது இதற்கும் ஆபரேஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய டாக்டர் இதில் என் தவறு எதுவும் இல்லை என் கைவிரித்து விடவே பஞ்சாமிர்தம் மூர்க்கமானார் .

இந்த பிரச்சனையை தான் இப்படியே விடப்போவதில்லை என் கூறினார். முதலில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் . அதற்கு பதில் அனுப்பிய நர்சிங் ஹோம் நிர்வாகம் அவரின் குற்ற சாட்டுகளை மறுத்து இருந்தது . அதன் தொடர்ச்சியாகத்தான் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார் பஞ்சாமிர்தம். நீதி மன்றத்தில் மருத்துவருக்கு எதிராக எல்லா குற்ற சாட்டுகளையும் நிரூபித்து மிக திறமையாக வாதாடினார். வாதி பிரதிவாதிகளின்
வாதங்களை கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்தி வைத்து இருந்தது.

மணி சரியாக பத்தரைக்கு வந்த நீதிபதி புதிய கேசுகளை விசாரித்து ஒத்தி வைத்து விட்டு மதியம் பஞ்சமிர்தத்தின் கேசில் தீர்ப்பு கூறியவர் வாதிக்கு ஏற்பட்ட குறைபாட்டிற்கு மருத்துவரின் தவறான ஆபரேஷன்தான் காரணம் என்று கூறி மருத்துவ நிர்வாகம் ரூபாய் ஒரு லட்சம் நஷ்ட ஈடாகவும் தவிர கேசின் செலவாக இரண்டாயிரமும் தர உத்தரவிட்டது.

தன்னுடைய வாத திறமையால் பெற்ற வெற்றியை நினைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவர் வீட்டருகே இருப்பாவர்கள் எல்லாம் கூட்டமாக கூடி போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர். கூட்டத்தில் இருந்த பஞ்சமிர்தத்தின் நண்பர் ஒருவரிடம் பஞ்சாமிர்தம் விவரத்தை கேட்க . என்ன உனக்கு தெரியலையா ? இப்ப இங்கு பக்கத்தில் உள்ள எலக்ட்ரிக் சுடுகாட்டில் இருந்து கொஞ்சம் நாளாக பிணங்களை எரிக்கும் போது வாடை வருகிறது வீட்டில் யாரும் இருக்க முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அதற்காகத்தான் நடவடிக்கை எடுக்க சொல்லி இந்த போராட்டம் என்று கூறியவர் பஞ்சாமிர்தத்தையும் கலந்து கொள்ள சொன்னார் . ஆனால் அதில் கலந்து கொள்ளாமல் சென்ற பஞ்சமிர்தாம் தன் மூக்கால் வாசனையை நுகர முடியாததிற்காக முதன் முறையாக சந்தோஷப்பட்டார் .

Thursday, July 23, 2009

நெகிழிச்சியுட்டிய ஐந்நூறு ரூபாய் !!!


பணம் கொண்ட வாழ்க்கையே ஒரு பரிசு !!!
பணம் கொண்டு பல பரிசுகளை வாங்க முடியும் !
ஆனால்
பரிசாக கொடுப்பதற்கு பணம் ஒரு பொருளல்ல .
பணத்தை பரிசாக கொடுப்பதற்கு அது ஒரு உயிரற்ற பொருளுமல்ல .

பணம் ஒரு அதிகார சக்தி.
அதனால் ஒரு இடத்தில் ஓய்ந்து
இருக்க முடிவதில்லை .

இப்படியான எண்ணங்கள்தான் என் மனதில் நேற்று இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்தன .

நேற்று இரவு நான் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பொருட்கள் வாங்கி விட்டு பில்லை கொடுப்பதற்காக பணத்தை எடுத்த போது அதில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டில் காலி இடத்தில் "இது அம்மா கொடுத்த பரிசு . கல்யாணத்திற்கு கொடுத்தது" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்து.

எனக்கு அதை பார்த்த போது ஒருவேளை அதில் ஏதேனும் போன் நம்பர் எழுதி இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தால் போன் பண்ணி சொல்லலாம் என் நினைத்தேன் . ஆனால் இல்லை . உண்மையிலேய அந்த பணத்தை கடையில் கொடுக்க எனக்கு மனத்திற்கு கஷ்டமாக இருந்து.

கல்யாணத்திற்கு பரிசாக கொடுக்க எத்தனையோ பொருட்கள் இருக்க அம்மா பரிசாக பணத்தை எதற்கு கொடுத்து இருந்திருப்பார்கள் . தன் மகன் அல்லது மகளுக்கு இது தேவைக்கு உதவும் என்று தானே. அந்த மகன் அல்ல மகளோ இந்த பணத்தை செலவு செய்ய கூடாது என்று தானே அதில் இந்த வார்த்தையை எழுதி வைத்திருப்பாள் . ஆனால் முடிந்தாதா?

பணத்தை அப்படியே வைத்து இருக்க ஒரு வலிமை வேண்டும் .
பண வலிமைதான் அது.

பணம் இருந்தால் பணம் இருக்கும்.
பணம் இல்லா விட்டால் பணம் இருக்காது.
இது புரிந்து புரியாத சுழ்ச்சிமம் .

வாழ்க்கையில் பர பர வென நாம் ஓடிக்கொண்டிருந்தாலும் சில சமயங்களில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை நெகிழத்தான் வைக்கின்றன .

.....

அடி தடி வெட்டு குத்து -தமிழ்மணத்தில்


என்ன தான் நடக்கிறது நம் தமிழ்மணத்தில் .

பதிவர்கள் ஒருவர் மற்றவரை தாக்கி பதிவு போடுவது அப்படி போட்டவரை பின்னூட்டத்தில் பின்னி பெடல் எடுப்பது இதை தான் நான் சமீப காலமாக படித்து வருகிறேன்.

கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தின் வாசனையை நுகர்ந்து வரும் எனக்கு இப்போது அதில் கொஞ்சம் தீயும் வாடையும் சேர்ந்து வருவதாகவே படுகிறது .

கடந்த வாரம் ஒரு பதிவர் விடை பெறுகிறேன்
என்றார் . பிறகு ஒரு பதிவர் தமிழ்மணத்தில் பரிந்துரையில் ஏதோ குண்டக்க மண்டக்க நடக்கிறது என எழுதினார். இதில் மூத்த அல்லது பிரபல பதிவர்கள் ஒன்றாக கூடி செயல் படுகின்றனர் என்றார். அதற்காக அவரை பின்னூட்டத்திலும் பிறகு வந்த பதிவுகளிலும் கும்மி எடுக்க அவர் இப்போது போதும்(டா சாமி ) விடை பெறுகிறேன் என்கிறார்.

உண்மையிலேயே அப்படி ஒரு பாகு பாடு நம் தமிழ்மணத்தில்
இருந்து வருகிறதா?
புது பதிவருக்கு ராகிங்கெல்லாம் நடை பெறுகிறதா ?

இது ஒரு புறம் என்றால் ஆரியர் , திராவிடர் என்கிற வேறுபாட்டில்
குடுமிபுடி சண்டை ,பதிவு ,பின்னூட்டம் வேறு.

அப்புறம் பிரபாகரன் ஆதரவு , எதிர்ப்பு சண்டை.

இதுதவிர மதங்கள் சார்ந்த தர்க்க ரீதியான பதிவு தாக்குதல்கள் ஒரு தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டு உள்ளது.

இதுதான் இப்படி இருக்கிறது என்றால் இடையில் சைக்கிள் கேப்பில் ஒரு பின்னூட்ட குண்டை தூக்கிப் போட்டு விட்டு ஓடிவிடும் அனானிகள் .

நம் தமிழ்குணம், தமிழ்மணம் முழுவதும் பரவி இருக்கின்றதா?

பதில்
சொல்லுங்கள் (அன்பான ) பதிவர்களே? (பணிவாகத்தான் கேட்கிறேன்)

குறிப்பு:
மேலே உள்ள படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு படம்தேவைப்பட்டது அவ்வளவுதான்.


...

Monday, July 20, 2009

லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!!



இப்ப செய்தித்தாளை எடுத்தால் குறைந்தது ஒரு செய்தியாவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பிரகஸ்பதிகளை பற்றி வந்து விடுகிறது. லஞ்சம் என்பது நம் கலாசாரத்துடன் ஊறிய ஒன்று. இதைப் போய் பொறி வைக்கிறேன் பிடிக்கிறேன் என்று கிளம்பினால் அப்புறம் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கும் நம் அரசு ஊழியர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் .

ஒருமுறை என் நண்பர் ஒருவரின் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிய போது தரகர் ஒரு ஜாதகத்தை கொடுத்தார் கூடவே இவர் வணிக வரி துறையில் வேலை செய்கிறார் சம்பளத்தை விட கிம்பளம் அதிகம் என்றார். அவருக்குத்தான் அந்த பெண்ணை கட்டி கொடுத்தார்கள். ஒருவேளை அந்த மாப்பிள்ளை நேர்மையாக இருந்திருப்பாரேயானால் பெண் கிடைத்திருக்குமா ? கிடைத்திருக்கும் என்ன கொஞ்சம் நாள் ஆகும். ஏனென்றால் அவர்தான் பிழைக்க தெரியாத ஆள் ஆயிற்றே !

சில வருடங்களுக்கு முன்பு நான் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய ஒரு தனியார் நிறுவனத்திற்காக மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரியை சந்தித்த போது , எங்கள் நிறுவனத்தின் பொருளை வாங்க பத்து சதவித கமிஷன் கேட்டு "வேண்டுமென்றால் அந்த தொகையை உங்கள் விலையில் கூட்டியே கொடுங்கள் கவர்மென்ட் சொத்து புள்ள இல்லாத சொத்துதானே" என்றார். ஆஹா என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு. எனக்கு ஒரு புது மொழியை சொல்லிகொடுத்த திலகம் அவர்.

அனால் அவரைப்போல் பெருந்தன்மையாய் தமிழக அரசின் ஊழியர் இருக்க வில்லை . டெண்டரில் மிக குறைவாக விலை கொடுத்து பெற்ற ஆர்டர்ருக்கான
பேமென்டை லஞ்சம் கொடுத்தால்தான் தருவேன் என்று தீபாவளிக்கு மோதிரம் கேட்டு முறுக்கிக் கொள்ளும் புது மாப்பிள்ளையாய் அடம் பிடித்தார் . அப்புறம் வேறு வழி?...கொடுத்தோம். பெற்றோம்.

இதை தவிர ஆர்டர் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களின்
பொஞ்சாதி ,புள்ளைகள் பேரில் இருக்கும் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் செய்து தர சொல்லும் குணசாலிகள் ஒருபுறம் .

அந்த கால கட்டத்தில் எனக்கு அரசு ஊழியர்கள் என்றாலே கம்பெனிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்வி செல்லும் எச்சகல சிங்கங்களாகத்தான் தோன்றும் . (எச்சகல நாய் என்றால் அவர்களுக்கு கோபம் வந்து விடும் அதனால் தான் சிங்கம்) . இப்போது அரசு ஊழியர்களுடனான தொடர்பு அற்று போனாலும் நிகழ்வு மறந்து விட வில்லை.

இப்போது அரசாங்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிகாரிகள் முதல்கொண்டு , பியுன்கள் வரை பிடித்து கொண்டிருப்பதாக காட்டினாலும் . இது பெருங்கடலின் ஒரு துளியில் நூற்றில் ஒன்றுதான். லஞ்ச ஒழுப்பு துறையின் மூலமாக லஞ்சத்தை நிச்சயம் ஒழித்து விட முடியாது. இதன் மூலம் லஞ்சம் வாங்கும் முறை தான் மாறுமே ஒழிய , லஞ்சம் வாங்குவது குறையாது. புரையோடி போன புண்ணுக்கு வெளி மருந்து சரிவராது. புண்ணின் மூலத்தை கண்டு அழிக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கும் மனநிலையே அதன் மூலம். அரசாங்கம் லஞ்சத்திற்கு எதிரார ஒரு மிகப்பெரிய விளம்பரத்தை எல்லா ஊடக மூலமாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் சிறுவர்களிடம் தங்கள் தாய் தகப்பனிடம் லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற உறுதி மொழியை வாங்க செய்ய வேண்டும் . நேர்மையாய் வேலை செய்யும் ஊழியருக்கு சிறந்த அரசு ஊழியர் என்கிற பட்டத்தை தர வேண்டும். அதனை நன்கு விளம்பரப்படுத்த வேண்டும். லஞ்சத்திற்கு எதிரான விளம்பரத்தில் லஞ்சம் வாங்குபவர்களை சமுதாயம் வெறுப்பதாக காட்ட வேண்டும் . லஞ்சம் வாங்காதவர்களை கதாநாயகர்களாக மக்கள் அனைவரும் அவர்களை விரும்புவதாக காட்ட வேண்டும். கூடுமானால் அதற்கு என்று ஒரு பிரபல நடிகரையோ ,அல்லது முக்கிய பிரமுகரையோ (நிச்சயம் அரசியல்வாதிகளை கூடாது) பயன் படுத்தாலாம்.

ஒரு சாதாரண பாத்திரம் வளக்கும் பவுடருக்கு விளம்பரம் செய்து மக்கள் மன நிலையை மற்ற முடியும் என்றால் . இதில் முடியாதா ?

ஒரு முக்கிய விஷயம்:
என்னை போன்ற குட்டாளிக்கே இப்படி எல்லாம் யோசனை தோன்றும் போது தாங்கள் கை கழுவுவதை , கால் கழுவுவதை கூட விளம்பரம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு தெரியாதா என்ன ? தெரியும் ஆனால் ஏன் நிறைவேற்ற மாட்டேன் என்கிறார்கள் .

தேவுடா ..இதை நான் எழுதிதான் தெரிய வேண்டுமா என்ன ?.


லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்ட ணக்கட னகட டண்ட ணக்கட!!!

......ஹி ..ஹி . ஹி ஹு ஹு ஹு . வர்ட்டா .

Saturday, July 18, 2009

ஏன் இந்த பிராமிண விரோத போக்கு. ?


நம் வலைப்பதிவுகளில் பொதுவாக பிராமின சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே அதிக பதிவுகள் வருகின்றன ஏன் என்று தெரிய வில்லை. உடனே நீ அந்த சமுகத்தை சார்ந்தவனா ? என சிலர் கேட்க கூடும் .
அவர்களுக்கான பதில்? இல்லை என்பதுதான் .
ஆனால் நான் கேட்ப்பதெல்லாம் ஏன் நம் தமிழ் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் கோபப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதுதான்.

எல்லா சமுகத்தை போலவும் ,பிராமின சமூகத்திற்கு என்று ஒரு மத கோட்பாடு இருக்கிறது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள் . முஸ்லீம் மதத்தினருக்கு என்று இருக்கும் கோட்பாடுகளை விமரிசித்து இவர்கள் பேசுவர்ர்களா? பிராமிணர்கள் தமிழ் சமுகத்தை மதிக்க வில்லை என்றால் , முஸ்லீம் சமூகத்தினர் மதிக்கின்றாரா ? பாகிஸ்தான் இந்தியாவை கிரிக்கெட்டில் ஜெயித்தால் மசூதியில் முஸ்லீம் இளைஞர்கள் பட்டாசு வெடிப்பதை பார்த்து இருக்கின்றேன். இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை நம் பகுத்தறிவு வாதிகள்.

ஒரு முஸ்லிமை பன்றி கறி சாப்பிட சொல்லி பாருங்களேன் அவர் எப்படி கோபப்படுவார் என்று. ஏனென்றால் அவர்களுடைய மதம் அதை தடை செய்கிறது.
அதேபோல இவர்களுக்கும் ஒரு கோட்பாடு இருக்கும் தானே. இதை மட்டும் ஏன் மக்கள் விரோத போக்காக பாக்க வேண்டும் .

என்னை பொறுத்த வரையில் ஹிந்துவோ ,முஸ்லிமோ , கிருத்துவரோ , ஹிந்துவில் ஒவ்வொரு சமுகத்தவரோ அவரவர் அவரவருடைய சித்தாந்தத்தில் கொண்ட நம்பிக்கையில் வாழ்ந்து விட்டு போகட்டுமே . இதில் குறை கூறுதல் எங்கிருந்து வந்தது .

நம் ஜனநாயகத்தில் கொலை குற்றவாளிகளுக்கு கூட அவர்களுடைய வாதத்தை சொல்ல அனுமதிக்கும் போது பதிவுகளில் மட்டும் எதிரடையான வாதங்களுக்கு இடம் கொடாமல் , அவர்களை இழிவாக பேசும் அது ஏற்கும்படியாக இல்லை. பொதுவாக ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் மற்றொருவர் மீது வரும் கோபம் அந்த நபர் சார்ந்து இருக்கும் சமுகத்தின் மீது வந்து விடுகிறது.

என்னை பொறுத்தவரை உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களாகிய நாம் நம் கருத்துக்களை பரிமாறி கொள்ள ஒரு நல்ல ஊடகமாக தான் இந்த வலைப்பதிவை பார்க்கிறேன். இதிலும் ஏன் இந்த விரோதம் ,கோபம் கொண்ட பதிவுகள் . ஜாதி ,மத ஏற்ற தாழ்வுகள் உலகெங்கிலும் உள்ளதுதான்.

நல்ல எண்ண அலைகளை மட்டுமே பரப்புவோம் . நம் வலை பதிவுகளில் இனி தமிழ்மணம் மட்டும் கமழட்டும்.

சக பதிவர்களுக்கு வாழ்த்துகள் !! மாற்று கருத்துகொண்ட பதிவர்களுக்கும் தான் !!

Friday, July 17, 2009

நான் பிரபல பதிவர் வந்திருக்கேன்.


நூத்து கணக்கான பின்னுட்டங்கள், வாசகர் பரிந்துரையில் தமிழ்மணம் மகுடம் எங்கு பாத்தாலும் என்னுடைய பதிவை பத்தியே பேச்சு என நான் ரொம்ப ஆசைப்பட்டாலும் அதுக்கு கொஞ்சம் குறைய நம்முடைய வலைப்பதிவர்கள் வந்து
டேய் மக்கா நீயும் பிரபலம் தான்டா
சும்மா பட்டையை கிளப்பு என முதுகில் தட்டி சொன்னதும்
கொக்கு பர பர , மைனா பர பர என மனது ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

பயப்புள்ள இப்ப நீ தனி ஆளு இல்ல , உனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்குடா

உண்மையிலேயே பிரபலமாக இருக்கும் பதிவர்களின் காதிலிருந்து வரும் புகைகளுக்கு நான் பொறுப்பல்ல .

இந்த பயப்புள்ளயையும் ஒரு மனுஷனா மதிச்சி பின்னுட்டம் போட்ட நல்ல பிரபல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

இனியாவது ஒழுங்கா யோசிச்சி நல்ல எழுத பாரு என்ன தெரியுதா என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

சரிங்க்ணா .

...

Thursday, July 16, 2009

ஒரு பிரபல பதிவரின் ஆதங்கம்.


'தமிழ்மணத்தில் ' எப்ப பாத்தாலும் பிரபல பதிவர் , பிரபல பதிவர் என்று எழுதுகிறார்களே எனக்கு மட்டும் என்ன கொறைச்சல் என என்னை நானே பிரபல பதிவர் என்று அழைத்துக் கொள்கிறேன்(வேறு வழி ) .

இந்த தலைப்பை பாத்தாலாவது நாலு பேர் வந்து நம்ம வலைப்பதிவில் தலையை காட்டிவிட்டு போக மாட்டார்களா ? என்கிற ஆதங்கம் தான் எனக்கு.

வந்ததுதான் வந்தீக அப்படியே ஒரு பின்னுட்டத்தையும்
தட்டி விட்டுட்டு போங்க .

Tuesday, July 14, 2009

ஆட்டோ டிரைவர்கள்(தமாஷான ) போராட்டம்


தமிழகத்திற்கு சேவை செய்யும் நம் ஆட்டோ டிரைவர்களின் நியாயமான போராட்டம் மக்களின் பேராதரவை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.

மிக குறைந்த கட்டணத்தில் ,பணிவன்புடன் பயணிகளை ஏற்றி செல்லும் நம் ஆட்டோ காரர்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தில் எப்படித்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் .அவர்கள் என்ன மனம்போன போக்கிலா கட்டணம் வசூலிக்கிறார்கள் .

நம் ஆட்டோகாரர்கள் அப்படி என்ன அதிகமாக கேட்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து லிட்டர் வீதம் மாதத்திற்குள் நுற்றி ஐம்பத்து லிட்டர் பெட்ரோல் ,டிசல்,கேஸ் மானிய விலையில் கேட்கிறார்கள் . அரசாங்கம் அதை கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே.

இதை பொது மக்களாகிய நாங்கள் எங்கள் ஆட்டோ நண்பர்களுக்காக உரிமையுடன் கேட்கிறோம். அரசாங்கமே உடனே செவி கொடு.

இதுக்கும் ஒரு போராட்டத்தை நடத்த முன் வரும் கம்யுனிச தோழர்களுக்கு: உங்கள் கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ?

இது போராட்டங்கள் மாதம்


இந்த மாதத்தில் மட்டும் எத்தனை விதமான போராட்டங்கள்.

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை மீட்க கோரி போராட்டம்.

தங்கள் சம்பளத்தை உயத்தை கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் .

இதே காரணத்திற்காக கால்நடை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் .

தமிழகத்தில் பொட்டாசியம் கார்பைடு தட்டு பாடு நிலவுவதால் தீப்பெட்டி தொழிலாளர்கள் போராட்டம்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி( பாலை ரோட்டில் கொட்டி) போராட்டம் .

தமிழகத்தில் உளுந்து தட்டு பாடு உள்ளதால் அப்பளம் தயாரிப்பாளர்கள் போராட்டம்.

சமச்சீர் கல்விமுறையை அமுல் படுத்தவும் ,தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த கோரியும் போராட்டம், தடியடி.

ஆட்டோ களுக்கு மானியத்தில் பெட்ரோல்,டிசல் ,கேஸ் வழங்க கோரி ஆட்டோ டிரைவர்கள் வரும் பதினேழாம் தேதி போராட்டம் .(ரொம்ப தமாஷான போராட்டம்)

தங்களது சம்பளத்தை உயாத்த கோரி சத்துணவு பணியாளர்கள் போராட்டம்.

இது தவிர இலங்கை தமிழருக்காக , பெட்ரோல் விலையை உயர்த்தியதற்காக
அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டம்.

இந்த போராட்டம் எல்லாம் சட்ட சபை நடப்பதால் கவனத்தை ஈர்க்க நடை பெறுவதாக கொண்டாலும் உலக வரலாற்றை திரும்பி பார்க்கும் போது
பேரரசருக்கு வயதாகும் போது குட்டி ,குட்டி மன்னர்கள் அடங்காமல் அவனை எதிர்க்க முற்படுவது தான் நினைவிற்கு வருகிறது .

பாடாவதியான மாயாவதியும் - முகமுடி கிழிக்கும் கம்யுனிஸ்டுகளும்


அதிகாரம் கைக்கு வந்தால் ஆணவம் தலைக்கு ஏறிவிடுவது சகஜம்தான் என்றாலும் மாயாவதிக்கு கொஞ்சம் அதிகமாகவே ஏறிவிட்டதாக தெரிகிறது. எந்த மாயாவதி என்று கேட்பவர்களுக்கு உ.பி. முதல்வர் என கூறினால் புரியும்.

நம் ஜெயலலிதாகூட முதல் முறை ஆட்சிக்கு வந்த போது இப்படி தான் எங்கும் ,எதிலும் நீக்கமற நிறைந்திருக்க நினைத்து தொட்டதுக்கெல்லாம் அவர் பெயர் வைத்தார் . நல்லவேளை பிறக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் தன் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. எங்கு பார்த்தாலும் அவர் கட் அவுட்கள் முளைத்திருக்கும். அவர் வீட்டில் கிளம்ப ஆரம்பிக்கும் போதே சென்னையின் எல்லா ரோடுகளிலும் ட்ராபிக் நிறுத்தப்படும் . அவர் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பின்பு முழுவதும் திருந்தினார என்பது தெரிய வில்லை . ஆனால் இந்த மாதிரியான வெளிப்படையான ஆடம்பரங்களை நிறுத்திவிட்டார். தோல்வியிலிருந்து கற்ற பாடம்.

ஆனால் மாயாவதி இன்னமும் பாடம் கற்றதாக தெரிய வில்லை. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு பண்ணி தனக்கு சிலை வைத்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் உ.பி யை முன்னுக்கு கொண்டு வருவதில் இல்லை.

அடுத்து கேரளா கம்யுனிஸ்டுகள் விஷயத்திற்கு வருவோம் . எங்காவது ஊழல் என்ற பேச்சு அடிப்பட்டால் உடனே ராஜனாமா செய் . என்று கூட்டம் போடுவதிலும் ,போஸ்டர் அடித்து ஓட்டுவதிலும் மும்மரமாக இருப்பவர்கள் தங்கள் தலைவர்கள் செய்ததை மட்டும் ஒத்து கொள்ளவே மாட்டார்கள் . அவர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டால் மட்டும் அது அரசியல் காழ்ப்புணர்ச்சி .

கேரளா மாநில செயலாளர் பிரனாய் ராயின் ஊழல் சம்பந்தமாக ஆதாரங்கள் சேகரித்த பிறகுதான் சி.பி.ஐ . ஆளுநரிடம் அனுமதி கேட்டது . அனுமதி அளித்த ஆளுநர் வசை மாறி பொழியப்பட்டார். இப்போது கேரளா முதல்வர் அச்சு பொலிட்பிரோ விலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் பிரனாய் ராயின் ஊழலை மறைக்காதது தான்.

தன் கட்சியில் இருக்கும் ஒரு ஊழல் பேர்வழியை தண்டிக்க முடியாதவர்கள் . ஊருக்கு உபதேசம் செய்வார்கள் .

வாழ்க கம்யுனிசம் .

Monday, July 13, 2009

இந்தியாவிற்காக பரிதாபப்படுங்கள் !!!



ஒரு நல்ல நாட்டை எப்படி மோசமாக நிர்வகிக்கலாம் என்பதற்கு இந்தியா தான் முன்னுதாரணம்.

எகிப்தில்
நம் பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்திக்கிறார் என்கிற செய்தியை பார்த்த பொது இப்படித்தான் எனக்கு தோன்றியது.

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிர வாதிகள் மேல் நடவடிக்கை எடுத்தால் தான் இனி அதனுடன் பேச்சிவார்த்தை என்கிற இந்திய அரசாங்கத்தின் நிலைபாட்டில் ஏன் இந்த பெரும் மாற்றம். அமெரிக்காவின் தூண்டுதலா ? அப்படி என்றால் இந்திய இறையாண்மை அமெரிக்க இறையாண்மைக்கு கட்டுப்பட்டு தான் உள்ளதா? தாலிபன் தீவீர வாதிகளை ஒடுக்கவேண்டுமானால் அமெரிக்கா , இந்தியாவை பேச்சவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிளாக் மெயில் செய்து இந்தியாவை பணியவைத்து விட்டது.

மும்பை தீவீரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத நிலையில் அதனுடன் பேச்சிவார்த்தைக்கு ஒத்து கொண்டதன் மூலம் இந்தியா ஒரு மென்மையான தேசம் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த உலகிற்கு நிரூபித்து உள்ளது.

இந்தியாவும் , இந்தியர்களும் வலிமையாக இருந்தாலும் அதன் தலைவர்கள் கோழைகளாக, உலகின் அழுத்தத்தை தாங்கும் வலிமை இல்லாதவர்களாக இருப்பதால்தான் இந்தியாவிற்கு எதிராக தீவீரவாதிகள் தாக்குதல் தொடர்கதையாக இருக்கிறது.

நம் நாட்டின் பாராளு மன்றத்தையே தாக்கினால் கூட கொஞ்ச நாள் அதைப்பற்றி கார சார மாக பேசி விட்டு பிறகு அதை மறந்து விடுவது தான் நம் தலைவர்களின் குணாதிசயம். பாராளு மன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக மரண தண்டனை விதிக்க பட்ட அப்சல் லுக்கு இன்னமும் தண்டனை நிறைவேற்ற பட வில்லை.
தன்னுடைய இறையாண்மை குள்ளேயே நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் எப்படி எப்படி மற்றொரு நாட்டை பணிய வைக்க முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம் ஒரு நாடு ஜனத்தொகையில் மட்டும் பெரியதாக இருந்து பிரயோஜனம் இல்லை. கொள்கையில் பிடிப்பு உள்ளதாக இருக்க வேண்டும். இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் இந்தியா ஒரு ஏழ்மை நாடாக இருந்தது ஆனால் இந்திரா காந்தி பாகிஸ்தானோடு போர் புரிவதற்கு அது தடையாக இருக்க வில்லை .இன்று இந்தியாவின் நிலை வேறு.

நாம் பொறுமையாக இருப்பதினால் போரை நிறுத்திவிட வில்லை தள்ளிபோட்டு கொண்டு தான் செல்கிறோம் . ஒரு நாள் நாம் வேறு வழி இன்றி எதிர்கொள்ள வேண்டி தான் இருக்கும் .

கடைசியாக ஒரு செய்தி:

சீனா இந்தியாவை தாக்கலாம் என இந்தியன் டிபன்ஸ் ரிவிவின் எடிட்டர்
பாரத் வர்மா கூறியுள்ளார். அதற்கு அவர் கூறிஉள்ள காரணம் : சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் பாதிப்பினால் எழுந்துள்ள அசாதரண சுழல் , பாகிஸ்தானில் உள்ளநாட்டு போரினால் அது முன்பு போல இந்தியாவின் மேல் கவனம் செலுத்த முடியாமை, இந்தியாவின் ,அமெரிக்கா ,ஐரோப்பிய நெருக்கங்கள் போன்றவைதான் .

அதற்காக சீன கடலில் அதனுடைய போர் கப்பல்களை அதிகப்படுத்தி உள்ளதாக குறிப்பிடுகின்றார். இந்தியா போன்ற மென்மையான (நன்கு கவனிக்கவும் ) நாடுகளை தாக்கி அதன் பகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் ஆசியாவில் தனது அதிகாரத்தை நிலை நாட்ட முயல்வதாக தெரிவிக்கிறார.

கலீல் ஜிப்ரனின் கவிதை ஒன்று :

எந்த தேசம் பழம் பெருமைகளை பேசி
அதன் நிகழ்கால துயரங்களை மறக்க நினைக்கின்றதோ
அதற்காக பரிதாபப்படுங்கள்.

Thursday, July 9, 2009

அல்கொய்தாதான் காரணம் -சீனா




இப்பதான் புரியுது இந்த சப்ப மூஞ்சிகளுக்கு .

சீனாவில் நடந்து வரும் கலவரங்களுக்கு அல்கொய்தா தீவீர வாதிகள் தான் காரணம். போராட்ட காரர்களுக்கு அல்கொய்தா பயிற்சி அளித்து உள்ளது என் சீன அரசாங்கம் பரபரப்பாக குற்றம் சாட்டி உள்ளது.

இத்தனை வருடங்களாக பாகிஸ்தானின் உற்ற தோழனாக அவன் செய்யும் எல்லா விஷமங்களுக்கு எல்லாம் துணை நின்னு ரொம்பதான் ராஜ தந்திரம் செய்வதாக நினைத்ததுக்கு இப்ப செம அடி விழுந்திருக்கிறது.

இந்த அழகான போராட்டத்தில் யார் ஜெயித்தாலும் , தோத்தாலும் நமக்கு சந்தோஷந்தான் . உய்குர் இனமக்கள் தனி துர்க்மெனிஸ்தான் கேட்டு போராடினாலும் இந்த போராட்டம் கன்புஷியஸ் மதத்தை பின் பற்றும் ஹான்ஸ் இன மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் தான். சிஞ்சியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதை கட்டுப்படுத்த அந்த அரசாங்கம் ஹான்ஸ் மக்களை அங்கு குடியமர்த்தியது. அதிலிருந்தே அவர்களுக்கு இடையே ஏற்பட்ட புகைச்சல் இப்போது நெருப்பாய் மாறி எரித்து உள்ளது.

மனித உரிமை என்கிற பேச்சிக்கே இடமில்லாத நாட்டில் போராட்டங்கள் காட்டு மிராண்டி தனமாக அடக்கப்படுவது சர்வ சாதாரணம் . அதே சமயத்தில் முஸ்லீம் தீவிரவாதிகளை அடக்குவது என்பது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது.

ஒரு நாட்டையே சிறைச்சாலை போன்று கட்டு திட்டங்களோடு நிர்வகித்து வரும் கம்யுனிச அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

கடைசி செய்தி:
சிஞ்சியாங்கில் உய்குர் மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளி கிழமை தொழுகைக்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளதாம்.

சபாஷ் சரியான போட்டி.

Wednesday, July 8, 2009

மாட்டிக்கிட்டான் சீனாக்காரன்


அப்பாடா இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது . இந்த சீனாக்கார துரோகிகளுக்கு
இது வரையில் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாததால ரொம்ப நிம்மதியா பாகிஸ்தானுக்கு உதவி செய்வது ,அதன் தீவீரவாத செயல்களுக்கு துணை போவது என இருந்தான். இப்போது அதே முஸ்லீம் மக்களின் மூலமாக ஆப்பு வைக்கும் படலம் ஆரம்பமாகயுள்ளது.

சீனாவின் சுயாட்சி பெற்ற சிஞ்சியாங் மாகாணத்தில் இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் அறுநூறு பேர் பலியாகியுள்ளனர். உய்குர் இன இஸ்லாமியர்கள் இங்கு தனி நாடு கேட்டு போராடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை ராணுவத்தை கொண்டு ஒடுக்கும் போது அனைத்துலக தீவீரவாத அண்ணன்கள் ஆசியாவின் பெரிய அண்ணனிற்கு ஆப்பு வைக்க முயலுவர்.

இதுவரையில் தீவீரவாதத்தை எட்டி இருந்து பாத்த செஞ்சேனை இனி பக்கத்தில்
பாக்கும் பாக்கியம் வரலாம் .தைவான், திபெத்தை போன்று இதையும் அடக்கு முறையை கொண்டு எளிதில்அடக்கி விட முடியாது.

இந்தியாவிற்கு எதிராக பாலுட்டி ,சீராட்டி தீவிர வாதிகளை வளர்த்த பாகிஸ்தானுக்கு இப்போது அவர்களே தலைவலியாக மாறி விட்டது போல . இந்த சீனாக்காரனும் மாட்டிகிட்டு முழிப்பதை கண்டு,கேட்டு ,படித்து ரசிக்க வேண்டும்.
இனிமேலாவது தீவீரவாதத்தின் வலி என்ன என்று அந்த சப்பை மூஞ்சி காரர்களுக்கு புரியும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் !

முட்டாள் தனமான சட்டங்கள் -முடங்கும் சமுதாயம் !

வெட்டு ஒன்னு
துண்டு ரெண்டு

தனி மனித உரிமை என்னும் மாய வலையில் சிக்கி கொள்வது சுலபம் வெளி வருவதுதான் கடினம். அது தான் இன்று உலகம் முழுவதும் நடைபெற்று கொண்டு
உள்ளது. தனி மனித உரிமை பற்றி பேசினால் பேசுபவர் முற்போக்கான எண்ணம் கொண்டவர் எதிர்த்து பேசுபவர்கள் பழமைவாதிகள் இது தான் இன்றைய நிலை.

தனி மனித உரிமையை பற்றி பேசுவது தவறான விஷயம் இல்லை என்றாலும் அது எங்கு எந்த சமயத்தில் பேசப்படுகின்றது என்பதில் தான் மிகப்பெரிய சர்ச்சை அல்லது தவறு இருப்பதாக நான் கருதுகின்றேன்.


விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைப்பதாக திருமணத்தை நிறுத்திய போலீசார் பெண்ணை அவள் காதலனிற்கு திருமணம் செய்து வைத்தனர் . மண்டபத்தில் இருந்த மாப்பிள்ளை வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ( பெற்று வளர்த்து படிக்க வைத்த பெற்றோருக்கு அவளின் திருமணத்தை நடத்த உரிமை இல்லை. சட்டமும் , காவல் துறையும் தான் அந்த பெண்ணின் காலம் முழுவதும் அவர்களுக்கு உண்டான நல்லதுக்கும்,கெட்டதுக்கும் வந்து நிற்க போகிறது. இது ஒரு புறம் என்றால் அந்த மாப்பிள்ளை மன நிலை எப்படி இருந்து இருக்கும் . ஒரு வேலை அவனுக்கு வேறு பெண் அந்த நேரத்தில் கிடைக்காமல் போயிருந்தால் அவன் படும் மன வேதனைக்கு சட்டம் என்ன பதில் சொல்ல போகிறது. ஆண் என்றாலே அவன் எந்த அவமானத்தையும் தாங்கி கொண்டுதான் ஆகா வேண்டுமா ?)

ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பு சென்னை தி. நகரில் டுஷன் சென்டர் வைத்து நடத்தி வந்த ஒருவர் தன் மனைவியை அவளின் கள்ள காதலனுடன் படுக்கை அறையில் பார்த்து விட்டு மனைவியையும், அவனையும் காவல் நிலையம் கொண்டு செல்ல அங்கு அந்த பெண் எனக்கு இவரோடு வாழ பிடிக்கவில்லை என்று கூறி எழுதி கொடுத்து விடுகிறாள் . அவள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அவள் தன் கள்ள காதலனோடு சென்று விடுகிறாள். இது தான் தனி மனித உரிமை .

ரோட்டில் ஒருவர் காணமல் போன தன் மனைவியை தன் மாமனார், மாமியாரோடு சேர்ந்து தேடி பெங்களூரில் அவளின் தோழி வீட்டில் கண்டு பிடித்து கூட்டிக்கொண்டு வருகிறார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவளை அவளின் லெசிபியன் தோழி இரண்டே நாளில் திரும்பவும் வந்து கூட்டி செல்கிறாள் . போலீசில் புகார் கொடுத்தால் இது அவளின் தனிப்பட்ட விஷயம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிடுகின்றனர். இதையே ஒரு ஆண் செய்தால் அது கடுமையான குற்றம் . என்ன சட்டம் டா இது.

நீலாங்கரையில் ஒருவன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயல்கிறான் . அவனிடம் விசாரித்ததில் . என் மனைவி என் மீது பொய்யான புகார் கொடுத்து இருக்கிறாள். அதை வைத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து என்னை கைது செய்ய போவதாக கூறுகிறார்கள் என்று கூறியவர் நான் கூலி வேலை செய்பவன் சாப்பாட்டுக்கே நாங்கள் கஷ்டப்படும் போது அவளிடம் விலை உயந்த செல்போன் எப்படி வந்தது என்று கேட்டு சண்டை போட்டதுக்கு என் மீது வரதட்சனை புகார் கொடுத்துள்ளாள் . என்று கூறுகிறான் .

இது இப்படி இருக்க சமீபத்தில்
என்னுடைய அண்ணன் வீட்டிற்கு நெய்வேலி பக்கத்தில் உள்ள ஊருக்கு போன போது அவர்களுக்கு பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் எப்போதும் சண்டை நடப்பதை பார்த்து ஏன் அவர்கள் வீட்டில் அப்படி சண்டை நடக்கிறது என்று கேட்ட போது , அந்த வீட்டின் ஆளிற்கு ரெண்டு மனைவிகளாம். அக்கா தங்கையையே கட்டிகொண்டானாம் . முதல் மனைவி பிரசவத்திற்கு சென்ற போது அவளின் தங்கை யோடு ஓடி போய் விட்டானாம் . இப்போது அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் முதல் மனைவிக்கு எப்போதும் அடி உதை தானாம்.

இதை எல்லாம் பார்க்கும் போது தனி மனித உரிமை எங்கு போய் சேர வேண்டுமோ அங்கு போய் சேராமல், அது லிப்ஸ் டிக்கிற்கும், பாப் கட்டிங்கிற்கும் இடையில் மாட்டி கொண்டதாக தான் தெரிகிறது.

இந்த பெண்ணுரிமை அல்லது தனி மனித உரிமை என்ற கருத்து குடும்ப அமைப்பே இல்லாத வெளி நாடுகளின் தாக்கத்தினால் உண்டானதாக தான் தெரிகிறது. வெளி நாட்டில் ஒரே கணவனுடன் வாழும் பெண் மணிகள் மிக மிக குறைவு. அவர்களுக்கு குழந்தையின் வாழ்க்கை ஒரு பொருட்டே இல்லை . முதல் கணவனிடம் ஒரு பிள்ளை , இரண்டாவது கணவனிடம் ஒரு பிள்ளை என பெண்ணும் , முதல் மனைவியின் மூலமாக ஒரு பிள்ளை, மூன்றாவது மனைவியின் மூலமாக ஒரு பிள்ளை என் ஆணும் வாழலாம்.

அவர்கள் தான் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என்று ஒரு நாள் கொண்டாடிவிட்டு போய்விடுவர். அவர்கள் நாட்டில் வேண்டுமானால் தனி மனித உரிமை பொருத்தமாக இருந்து இருக்காலாம். நம் நாட்டில் அப்படி இல்லை இங்கு பெண்கள் திருமண வாழ்க்கையை புனிதமாக பார்க்கின்றனர். பிள்ளைகளை செல்வமாக பார்க்கின்றனர். தன் பிள்ளைக்காக எத்தனையோ விஷயத்தை தியாகம் செய்கின்றனர் . இங்கு குடும்ப உறவு என்பது ஒரு அழுத்தமான பிணைப்பாக உள்ளது. பிள்ளைகளுக்காக அவ்வளவு செய்கிறவர்கள் அவர்களிடம் இருந்து கொஞ்சம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும். ஒரு சாதாரண விளையாட்டிற்கே பல விதிகள் இருக்கும் போது சமுதாயத்திற்கு ஏன் இருக்க கூடாது

ஒரு முறை பத்திரிக்கையாளர் மதனிடம் வெளிநாட்டில் பெண்கள் கல்யாணம் ஆனால் கூட தங்கள் உடம்பை கச்சிதமாக வைத்து கொள்கிறார்களே ஆனால் இந்தியாவில் கல்யாணம் ஆகிவிட்டால் பெண்கள் குண்டாகி விடுகிறார்களே என்று கேட்ட போது அவர் வெளி நாட்டு பெண்களுக்கு எப்போது விகாரத்து ஆகும் என்று தெரியாதாகையால் அவர்கள் அடுத்த கல்யாணத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டியுள்ளது என கூறி இருந்தார்.

வெளி நாட்டு நாடோடிகளை பார்த்து நாம் நம் சட்டங்களை மாற்றினால் நம் நாட்டின் குடும்ப அமைப்பை நாமே சிதைப்பதை போன்று இருக்கும்.

தனி மனித உரிமையின் உச்ச கட்டம் இனி ஆணும், ஆணும் , பெண்ணும், பெண்ணும், டும், டும், டும்.

Tuesday, July 7, 2009

மனசாட்சியே இல்லாத மாம்பழ வியாபாரிகள் #*#**


பழங்களா ? அல்லது விஷங்களா ?

அடுத்தவன் எக்கேடு கேட்டால் என்ன ? எனக்கு பணம் வந்தால் சரி !! என்கிற மனோபாவம் நம் வியாபாரிகளிடம் வந்து பல காலமாகி விட்டது என்பது உண்மைதான். ஆனால் பழங்களை கூட விஷங்களாக மாற்றும் கொடுரம் எப்படி தான் வருகிறதோ தெரியவில்லை.

கார்பைடு கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பது, ஆப்பிள்களுக்கு மெழுகு பூசுவது என கொடுமையான வகையில் பணத்தை சம்பாதிப்பதை விட அவர்கள் தங்களுடைய மனைவி,மகளை வைத்து விபச்சாரம் செய்தால் கூட அது தவறில்லை.

அரிசியில் கல் கலப்பது, மிளகாய் பொடியில் செங்கல் கலப்பது, மிளகில் பப்பாளி விதையை கலப்பது என கலப்படம் இல்லாமல் பொருட்களே இல்லை எனலாம் . வழக்கம் போல் நம் கையாலாகத அரசும் ஒடுக்க எந்த நட வடிக்கையும் எடுக்காமல் கைகட்டி பாக்கலாம்.

ஆனால் உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கும் , சிறு பிள்ளைகளுக்கும் கொடுக்கும் பழங்களில் கூட இவர்களின் கைவண்ணத்தை காட்டினால் இவர்கள் எப்படி சும்மா விடுவது. ஆனால் சும்மாதானே விடப்படுகிறார்கள். அவர்கள் பழங்களை பறிமுதல் செய்வது மட்டும் இல்லாமல் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் .

மற்றத்திற்கு எல்லாம் வாய்கிழிய பேசும் இந்த வணிக சங்கத்தார் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் ????

Monday, July 6, 2009

சினிமாவும் ஒரு சிறந்த தொழிலே.!!

சொல்லி அடித்தால்
நெத்தி அடி அடிக்கலாம்


அறை குறை ஆடை பெண்கள் , கிசு கிசுக்கள் உதட்டை கடிப்பது இது தான் சினிமா என்றதும் பலருக்கு வருகிற ஞாபகமாக இருக்கலாம் . ஆனால் சினிமா என்பது முறையாக மேற்கொண்டால் ஒரு சரியான தொழில் என்பதில் சந்தேகமே இல்லை .

பொதுவாக சினிமா எடுக்க வரும் பல தயாரிப்பாளர்கள் நாக்கை தொங்க போட்டு கொண்டு வருவதால் தான் (எதற்கு என்று என்னை கேட்க்க வேண்டாம்)அவர்களால் சரியாக ஒரு விஷயத்தை நிதானிக்க முடிவதில்லை.
அப்படி வருபவர்களுக்கு இரண்டு விஷயத்தில் கண்டம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒன்று பெண்கள் . இதை இதற்கு மேல் சொல்ல தேவை இல்லை . அடுத்து தன்னுடைய மகனை கதாநாயகன் ஆக்குவது.

கதை சொல்லும் சில இயக்குனர்கள் தயாரிப்பாளரின் மகனே கதா நாயகன் என்றால் எந்த பிரச்சனையும் இருக்காது என முதல் படத்தில் சொல்லி விடுவர் . ஒரு வேலை அந்த மகன் கதாநாயகனுக்கு தகுதியாக இருந்தால் சரி. இல்லா விட்டால் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது போலதான் .

பெரிய தயாரிப்பாளர் என்றால் அவர் சோதனை செய்து பாக்கலாம். இதுதான் முதல் படம் என்றால் யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

முதலில் சினிமாவை கவர்ச்சியாக பார்ப்பதி நிறுத்திவிட்டு அதை ஒரு தொழிலாக பார்க்கும் மனநிலை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த மனநிலை வந்தால் மட்டுமே சினிமாவில் இறங்க வேண்டும் . சினிமா நடிகர் , நடிகைகள் மீதான பிரமிப்பு நீங்கினால் மட்டுமே அந்த தயாரிப்பாளர் சினிமா தயாரிப்பதற்குன்டான தகுதி பெறுகிறார்.


சினிமாவிற்கான மார்க்கெட்டிங் முறைகள் என்ன என்பதையும் , அது ஒவ்வொரு வெற்றி படத்திலேயும் எவ்வாறு செயல் படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழிலுக்குமான சந்தை நிலவரத்தை போன்றுதான் சினிமாவிற்கான சந்தை நிலவரமும் மாறிக்கொண்டே இருக்கிறது. வி.சேகர் , விசு போன்ற வர்களின் படங்களை பார்க்கும் பெண்களின் மார்கெட்டை இப்போது டி.வி.சீரியல்கள் பிடித்து கொண்டுள்ளன என்பது போன்ற அடிப்படை நிலவரமாவது தெரிந்து இருப்பது அவசியம்.

படத்தின் விற்பனை சாட்டிலைட் சேனல்களில் எவ்வளவிற்கு போகும் , இசை பாடல்கள் எவ்வளவிற்கு போகும், வெளிநாடுகளில் எவ்வளவு போகும் என்பது போன்ற புள்ளி விவரங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் .

இவை எல்லாத்தையும் தாண்டி படத்தின் கதை எப்படி உள்ளது, இந்த கதையை பார்ப்பதற்கு மக்கள் தங்களது இரண்டரை மணி நேரத்தை செலவு செய்வார்களா என் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.


இன்னும் வரும் .....

Saturday, July 4, 2009

ஓரினசேர்க்கையும் - கள்ளக்காதலும்!


#### ஓரின சேர்க்கை என்கிற "புனித உறவுக்கு" உச்ச நீதிமன்றத்தில் பச்சை கொடி காட்டியாயிற்று . லட்ச கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதற்கு தராத முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பிற்கு தந்து , தனது தேச பக்தியை காட்டி விட்டன வட இந்திய சேனல்கள் .

இனி என்ன . ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் தான். இப்போது
பயோ டேட்டாவில் தந்தை பெயர் , கணவன் பெயர் என்பதிற்கு பக்கத்தில் ஓரிணையாளரின் பெயர் என் போட்டு கொள்ளலாம்.

ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் கட்டி பிடித்து முத்தம் கொடுக்கும் அந்த குடும்ப பாங்கான போட்டோ பத்திரிகையில் வரலாம். பத்திரிக்கைகளில் ஓரிணையாளரை திருப்தி படுத்துவது எப்படி? என்பதற்கு சில பக்கங்களை ஒதுக்கலாம். இதற்கு ஸ்பெஷலிஸ்ட் என கூறி கொண்டு சில டாக்டர்கள் டி.வி யில் பேசி லேகியம் விக்கலாம்.

இன்னும் கொஞ்சம் காலத்தில்ஓரிணையாளர்கள் தங்களுக்கு வேலையில் ,
படிப்பில் ( தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு !!!) இட ஓதிக்கிடு
கோரலாம். ஒருவேளை வசதி இருந்தால் , சிறுபான்மையினர் பிரிவின் கிழ்
பள்ளியோ, கல்லூரியோ ஏன் பல்கலைகழகமோ துவக்கலாம்.

உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதற்கு காரணமே இங்கு குடும்ப அமைப்பு மிக உறுதியாக இருப்பதுதான். நாகரிக நாடோடிகள் என்று சொல்லப்படும் வெளிநாட்டினர் தங்கள் இஷ்டபடி வாழ்வதனால் தான் அங்கு அரசாங்கங்கள் அந்த மக்களை குழந்தை பெற்று கொள்ள சொல்லி கெஞ்ச வேண்டி உள்ளது . அவர்கள்ளுக்கு செக்ஸ் என்பது ஒரு போதை தரும் விளையாட்டு மட்டுமே. இங்கு செக்ஸ் என்பது போகமாக பார்க்கப்பட்டாலும் குழந்தை என்பது செல்வமாக பார்க்கப்படுகிறது.

தனி மனித உரிமை என்று சொல்லிக் கொண்டே போனால் கள்ள காதலும் தவறு இல்லை என்று கூறுவார்கள் . ஒரு பெண்ணும் ,ஆணும் ஒருவரோடு ஒருவர்
கலவி கொள்ள வேண்டும் என விரும்பினால் அதில் என்ன தவறு இருக்கின்றது.
அவளுக்கு அவளின் கணவனிடம் கிடைக்காததை மற்றொருவனிடம் பெற்று கொள்கிறாள் இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூடத்தான் பாப் கட்டிங் பண்ணிய பைங்கிளிகள் கேட்கலாம். அதற்கு என்ன பதில் கூற போகிறது இந்த அரசாங்கம்.

கள்ளகாதல் என்றதும் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஒரினை ஜோடிகளில் ஒருவர் மற்றோவரை விட்டு வேறு ஒருவரின் உறவு வைத்திருந்தால் அதற்கு பெயர் என்ன?. திருமணம் ஆனா பின்பு ஒரு பெண்ணுக்கோ , ஆணுக்கோ ஓரிணை துணை ஏற்பட்டால் அதற்கு எப்படி தீர்வு காண்பது.

இப்படி எல்லாம் வழக்கு வந்தால் , தேங்கி கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளின் மத்தியில் ,இதற்கென தனது பொன்னான நேரத்தை செலவிட தயாராகத்தான் இருக்கிறதா ? சட்டம் ஒழுங்கும், நீதி துறையும் .

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் !!
(ஒரினையாக ) இணைந்தே நாம் பல காரியம் செய்வோம்!!

வாழ்க இந்தியா!!!!!.

Wednesday, July 1, 2009

கோழை நாட்டின் குடிமக்கள் நாம் !!


கோழை நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ள கொஞ்சம் வெட்க்கமாகத்தான் இருக்கிறது. ஒரு நாடு லட்ச கணக்கில் படை வீரர்களையும் , கோடிகணக்கில் ஆயுதங்களையும் வைத்திருப்பதால் மட்டும் வல்லரசாக மாறிவிடுவதில்லை . அதனை ஆளும் தலைவர்களின் தைரியமும் ,மன உறுதியும் தான் அது வல்லரசா இல்லை புல்லரசா என்பதை முடிவு செய்கிறது.

9/11 தீவிரவாதிகள் தாக்குதலிற்கு பிறகு அமெரிக்கா இந்த போரில் எங்களோடு இல்லாதவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என கூறி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது . அதில் வெற்றியும் கண்டு வருகிறது.

சீனா தன் பக்கத்து நாடான திபெத்தை ஆக்கிரமித்து இன்று வரை அதனை அடிமை படுத்தி வருகிறது . உலக நாடுகள் எல்லாம் ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள டீக்கடை பெஞ்சில் ஒரு சாதா டீயும் ரெண்டு மெது வடையும் சாப்பிட்டு கொண்டு உள்ளன . அதை போல் தைவானையும் சுதந்திர நாடக அங்கிகரிக்காமல் அதனை பயமுறுத்திக்கொண்டே உள்ளது.

தம்மாதுண்டு இலங்கையும் மகா பயங்கர ,கொடுர, கொலைகளை லட்சகணக்கில் செய்து விட்டு , உலக நாடுகள் என்று சொல்லப்படும் பத்தாம் பசலிகளுக்கு குச்சி மிட்டாயும் , கோன் ஐசும் கொடுத்து கொண்டு உள்ளது.

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியான பாகிஸ்த்தான் எல்லா விதமான தீவிரவாத செயல்களையும் தன் பக்கத்து நாடான இந்தியாவிற்கு செய்தது விட்டு அதனை சமாதான பேச்சு வார்த்தைக்கு வரும் படி வாய் கூசாமல் கூப்பிடுகிறது.

அதை செய்வோம் இதைசெய்வோம் என்ற ஜப்பான், அமெரிக்கா , தென் கொரிய
நாடுகளுக்கு பெப்பே காட்டி அணு குண்டு சோதனை நடத்தியது வட கொரியா. எங்கள் எல்லை பகுதிக்குள் வேறு நாட்டு போர் விமானங்கள் பறந்ததால் அதனை போருக்கு விட்ட அழைப்பாகவே கருதுவோம் என்று தைரியமாகவே கூறியுள்ளது .

ஈரானும் இப்போது எதிர்ப்பையும் மீறி அணுகுண்டு தயாரிக்க போகிறது.

ஆனால் மகா பராக்கிரம இந்தியாவோ தன் நாட்டு மக்களின் வம்சா வழியினரை கொல்ல ஆயுதமும் , பணமும் பயிற்சியும் அளித்தது .

எத்தனை முறை தாக்குதல் நடத்தினாலும் தாங்குவோம் ஆனால் திருப்பி தக்க மாட்டோம் என்று (தாக்குதல நடத்திய தீவிரவாதிகளை பிடிப்பதற்கு முயலாமல் ) பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒத்து கொள்கிறது.

(தன் நாட்டு பிரதமரை ஒரு குட்டி நாட்டின் போர் வீரன் தாக்கிய போது பெரிய அளவில் அலட்டி கொள்ளாமல் பரந்த மனதுடன் இருந்த நாடாயிற்றே !)

தன் நாட்டு மக்கள் மீது வெளி நாட்டில் எத்தனை முறை தாக்குதல் நடந்தாலும் அதனை பற்றி கோபமாக அறிக்கை கூட விடாமல் மௌனமாகவே உள்ளது.

இந்தியாவின் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது நம் ரத்தத்தில் ஊரியதுதான் என்பது புரியும். தைமூர் படையெடுப்பின் போதும் , முஸ்லீம் மன்னர்கள் படை எடுப்பின் போதும் ஒரு இந்திய மன்னன் மற்றொரு மன்னனுக்கு உதவி புரியாமால் பிறகு அவனும் தோற்பதும் வாடிக்கையாக இருந்தது. கடைசியாக வந்த ஆங்கிலேயர்களுக்கும் இந்தியனை பிரித்தாள்வதற்கு நாமே வழி வகுத்து கொடுத்தோம்.

பழைய குறுநில மன்னர்கள் அரசனுக்கு கப்பம் கட்டியும் போர் நேரத்தில் படைகளை கொடுத்தும் உதவினர். சில சமயம் பேரரசரின் எதிரிகளுக்கும் தன்னுடைய சுய லாபத்திற்காக உதவி புரிந்து கவிழ்த்தனர்.

இப்போதும் குறு நில மன்னர்களாக மாநில கட்சிகள் மற்றும் சிறு சிறு கட்சிகள் தேர்தல் நேரத்தில் தன் சுய லாபத்திற்காக மத்திய அரசிற்கு ஆதரவு அளிப்பதும் அல்லது விளக்கி கொள்வதுமாக உள்ளனர். தேச நலன் என்பது பள்ளி, கல்லூரி பாடங்களிலும் மற்றும் பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளிலுமே காண முடிகிறது.

அரசாங்கத்தை ஆள்பவர்களும் குறுகிய கால வோட்டு தந்திரங்களை செய்வதிலேயே காலத்தை கழிப்பதால் நீண்ட கால திட்டங்களை இந்திய பாதுகாப்பிற்காக தீட்டுவதில்லை.

பாகிஸ்தானுடன் போர் வேண்டாம். குறைந்தபட்சம் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்க பட்டத்தையாவது இந்திய அரசின் தலைமை கண்டிக்கலாமே.

இந்தியா இப்போது வளர்ந்த நாடக உருவெடுத்து உள்ளது . உலக பணக்காரர்களில் இந்தியர்கள் இடம் பிடிக்கின்றனர். உலகத்தின் மிக பெரிய வாங்கும் சக்தி கொண்ட பொருளாதார சந்தையாக இந்தியா மாறியுள்ளது . உலகின் எந்த மூலையிலும் தயாராகும் பொருட்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர அந்த நாட்டின் நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர். வெளி நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் தங்கள் சிறந்த அறிவின் காரணமாகவே பெரிய பொறுப்புகளில் உள்ளனர். இந்தியர்களை அறிவு ஜீவிகளாக உலகம் பார்ப்பதும் இப்போதுதான்.

ஆனால் இந்தியாவை ஆளும் தலைவர்களின் மன நிலை தான் இன்னும் ஏழ்மை மற்றும் கோழை நிலையிலேயே உள்ளது. அவர்கள் இந்தியா என்கிற வளர்ந்த நாட்டின் தலைவர்களை போல நடந்து கொள்வதும், சிந்திப்பதும் இல்லை.

வெளியுறவு கொள்கை என்பது நம் நாட்டை சேர்ந்ததாக இல்லாமல் பிற நாடுகளின் கொள்கைகளை சார்ந்தே உள்ளது. 26/11 தாக்குதலிற்கு பிறகு போர் மேகம் சூழ்ந்த பிறகு அது அமெரிக்காவின் அல்கொய்தாவிற்கு எதிரான போரை பாதிக்கும் என்று போரை நிறுத்தியது . இப்போது மன்மோகன் சர்தாரியை சந்தித்ததும் அமெரிக்காவின் நிர்பந்தத்தினாலேயே .

இலங்கைக்கு சீனா உதவி செய்வதாலேயே , இந்தியாவும் அதற்கு உதவுகிறது என்பது வடிகட்டின முட்டாள் தனமாகவே உள்ளது . இலகையை அடக்க விடுதலை புலிகளை இந்தியா ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி இருக்க வேண்டும். எப்படி அமெரிக்கா சீனாவிற்கு செக் வைக்க இந்தியாவையும் , இந்தியாவிற்கு செக் வைக்க பாகிஸ்தானையும் பயன் படுத்துகிறதோ , அப்படிதான் இந்தியாவும் செய்திருக்க வேண்டும். ஆட்சி கவிழ்ந்து விடாமல் இருக்க செய்யும் தகிடு தத்தங்களில் ஒரு சிறு பகுதியை வெளியுறவு கொள்கை வகுப்பதில் நம் ஆட்சியாளர்கள் செய்தாலே இந்தியா தன் பிராந்தியத்தில் ஒரு வல்லமை உள்ள ஒரு நாடக இருக்க முடியும்.

இந்தியாவை சுற்றி சக்கர வியுகம் வகுத்து கொண்டு இருக்கும் சீனாவை எப்படி கையாள போகிறது இந்தியா. எல்லா நாடுகளும் தங்கள் மக்களுக்கு வெளி நாட்டில் நடக்கும் கொடுமைகளை மிக தீவீர மாக எடுத்து கொள்கிறது. ஆனால் இந்தியாவோ இன்னமும் மௌனம் காக்கிறது.

அஹிம்சை வழியில் நடந்து சுதந்திரம் வாங்கித்தந்த காந்தி தனி மனிதனாக தான் அதை செய்தார் . ஆனால் ஒரு நாடு அஹிம்சை நாடாக (அதுவும் இப்போதைய சூழலில்) இருக்கவே முடியாது.

இந்தியர்களும் கோபப்படுவார்கள் என்பது உலகிற்கு ( குறைந்த பட்சம் ஆஸ்திரேலியாவிற்காவாவது ) தெரியப்படுத்துவது அவசியம். இந்தியாவின் வெளியுறவு கொள்கை ஒரு வளர்ந்த நாட்டின் வெளியுறவு கொள்கையை போலவே இருக்க வேண்டும் .

இல்லாவிட்டால் ஒரு கோழை நாட்டின் குடிமக்கள் என்பதை எண்ணி வெட்கப்படுவதை தவிர வேறு வழி இல்லை நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு .

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா