Wednesday, December 9, 2009

தெலுங்கானா பிரச்சனையும் ஈழப் பிரச்சனையும்


நினைத்தார் முடித்தார் . பணிந்தது மத்திய அரசு . புதிய மாநிலம் உருவாகும் விரைவில். ஆனால் வாய்சொல்லில் வீரர்கள் நிறைந்த தமிழ் நாட்டில் ஈழ போர் ஆரம்பித்தபோது பேசினார்கள் , நடக்கும் போதும் பேசினார்கள் முடிந்த பின்பும் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் . மத்திய அரசை எதிர்ப்பதை போல் நடித்தார்கள் பிறகு பெட்டி பாம்பாய் அடங்கிபோனார்கள் . திருமா உண்ணா விரதம் நாடகத்தை ஆரம்பித்தார் . தொண்டர்கள் எல்லோரும் திருமாவின் உயிரை காப்பாற்று என்று பஸ்ஸை கொளுத்தினார்கள் . முதல்வர் கேட்டு கொண்டார் என்று உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் . தான் எடுத்து கொண்ட ஒரு செயலை முடிக்காமல் பாதியில் கழன்று கொண்ட ஒரு தலைவர்தான் நமக்கு இருக்கின்றார்.

அடுத்து கலைஞர் தன்னுடைய நாடகத்தை ஆரம்பித்தார் . காலையில் ஏழுமணிக்கு நடை பயிற்சிக்கு வந்தவர் அப்படியே உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார் . தமிழுக்காக தன்னுடைய உயிரை கொடுக்கபோவதாக கூறினார் . அப்புறம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறிவிட்டு அவரும் பழரசம் சாப்பிட்டு விட்டு சென்றார் . அவரும் தான் எடுத்த காரியத்தை முடிக்காமல் இன்றும் பல வசனங்களை பேசிக்கொண்டு தான் இருக்கின்றார்.

அவர்கள் எல்லாம் நமக்கு சொல்லி கொடுத்தது நாம் எது செய்ததாளும் அதற்கு மத்திய அரசு பணியாது என்பதை தான். ஆனால் இரண்டு எம் எல் களை கொண்ட ஒரு ஒல்லிகுச்சி தலைவர் தன்னுடைய மன உறுதியால் மத்திய அரசை அசைத்து காட்டி உள்ளார் . தான் எடுத்து கொண்ட காரியம் முடியும் வரை அவர் யார் சொல்லியும் கேட்கவில்லை . இன்று அவர் சொல்லித்தான் ஒரு அரசு கேட்கின்ற நிலை உருவாகி உள்ளது .

ஆயிர கணக்கில் தமிழ் உயிர்கள் கொல்லப்பட்ட போதும் வசனம் பேசிய வர்கள் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை தமிழகத்தில் .

ஆனால் ஒரு நல்ல செயல் தலைவனை தான் தமிழன் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கின்றான்.


....
....
....

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா