
இந்த மாதத்தில் மட்டும் எத்தனை விதமான போராட்டங்கள்.
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை மீட்க கோரி போராட்டம்.
தங்கள் சம்பளத்தை உயத்தை கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் .
இதே காரணத்திற்காக கால்நடை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் .
தமிழகத்தில் பொட்டாசியம் கார்பைடு தட்டு பாடு நிலவுவதால் தீப்பெட்டி தொழிலாளர்கள் போராட்டம்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி( பாலை ரோட்டில் கொட்டி) போராட்டம் .
தமிழகத்தில் உளுந்து தட்டு பாடு உள்ளதால் அப்பளம் தயாரிப்பாளர்கள் போராட்டம்.
சமச்சீர் கல்விமுறையை அமுல் படுத்தவும் ,தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த கோரியும் போராட்டம், தடியடி.
ஆட்டோ களுக்கு மானியத்தில் பெட்ரோல்,டிசல் ,கேஸ் வழங்க கோரி ஆட்டோ டிரைவர்கள் வரும் பதினேழாம் தேதி போராட்டம் .(ரொம்ப தமாஷான போராட்டம்)
தங்களது சம்பளத்தை உயாத்த கோரி சத்துணவு பணியாளர்கள் போராட்டம்.
இது தவிர இலங்கை தமிழருக்காக , பெட்ரோல் விலையை உயர்த்தியதற்காக
அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டம்.
இந்த போராட்டம் எல்லாம் சட்ட சபை நடப்பதால் கவனத்தை ஈர்க்க நடை பெறுவதாக கொண்டாலும் உலக வரலாற்றை திரும்பி பார்க்கும் போது
பேரரசருக்கு வயதாகும் போது குட்டி ,குட்டி மன்னர்கள் அடங்காமல் அவனை எதிர்க்க முற்படுவது தான் நினைவிற்கு வருகிறது .
1 comment:
போராட்டங்கள் இல்லாத வாழ்க்கை வேண்டும் - கேட்டது கிடைக்க வேண்டும்
Post a Comment