Saturday, January 30, 2010

இந்தியாவின் செல்லபிள்ளை - பாக்கிஸ்தான்


















நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ஆனால் நீ செய்தால் அவ்வளவுதான் என்று வீட்டின் கடை குட்டி அடிக்கும் லூட்டி தான் பாக்கிஸ்தான் இப்போது அடித்து கொண்டு இருக்கிறது.

26/11 தீவீரவாத தாக்குதலுக்கு இன்னமும் உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தான் அரசியல் பபூன்கள் ,
ஐ . பி. எல் -லில் பாக்கிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் இந்தியா புறக்கணித்துவிட்டது என்று கண்ணீர் வடிக்கின்றனர் .

நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் செத்து மடிந்த விஷயம் அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை . ஆனால் தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் போனி ஆகவில்லை என்று மட்டும் கூப்பாடு போடுகின்றனர். அதற்கு ஷாருக்கான் போன்றவர்களின் சப்பை கட்டு வேறு. இதில் அரசாங்கத்திற்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாக். வீரகளை சேர்த்து கொண்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் .அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்று கூறும்போது அதைப்பற்றி கருத்து மட்டும் ஏன் கூறவேண்டும்.

உடனே நார்த் இந்தியாவின் கேமரா நீதிமன்றங்களான மீடியாக்கள் இதனை ஒரு விஷயமாக எடுத்துகொண்டு பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் கருத்து கேட்கின்றனர்.

இந்தியாவில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் வெளி நாட்டு வீரர்களை சேர்த்து கொள்வதும் , கொள்ளாமல் இருப்பதும் நமது தனிப்பட்ட உரிமை . அதை கேள்வி கேட்க அடுத்த நாட்டிற்கு எந்த வித உரிமையும் இல்லை . குறிப்பாக பாகிஸ்தானிற்கு கொஞ்சம் கூட அறுகதை இல்லை.

இந்தியாவில் தீவீரவாத செயல்களை கட்டவிழ்த்து விடும் நாடாகவும் , இந்தியாவிற்கு செக் வைப்பதற்காக சீனாவிற்கு உதவி செய்து வரும் நாடாகவும் இருந்து கொண்டு இப்படி உரிமையையும் கேட்கிறது பாக்கிஸ்தான் . அதற்கு பொறுப்பாக பதில் சொல்லி கொண்டு இருக்கிறது இந்தியா .

லண்டனில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷியை தான் சந்திக்க ஆவலாக இருப்பதாக எஸ் . எம். கிருஷ்ணா சொல்கிறார் உடனே குரோஷி தான் சந்திக்க போவதில்லை என்கிறார் . இப்போது கிருஷ்ணா பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சு வார்த்தை என்கிறார். ஏன் இந்த முரண்பாடு நம் அமைச்சரிடம்.

ஒருவேளை இந்தியாவின் ஆட்சியாளர் மனதில் ஐ நா சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கிற வரையில் இப்படிதான் நயந்து போக வேண்டும் என நினைப்பிருந்தால் அது ஒரு தவறான அரசியல் தந்திரமாகத்தான் இருக்கும்.

சென்ற ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற ஐ நா சபை விவாதத்தில் சீனாவின் ஆதரவை கோர சிங் சீன பிரதமர் வெண் ஜியாபோவிற்கு போன் போடா அவர் எடுக்கவே இல்லை . ஆனால் அதற்காக சீனாவின் உறவையா முறித்து கொண்டோம். மாறாக உலக வெப்பமயமாதல் கொபன்கேகம் மாநாட்டில் சீனாவோடு இந்தியா ஒத்துழைத்தது .


அதே போல் பாகிஸ்தானை இந்தியா மிக எச்சரிக்கையோடு கையாளாமல் அதனை ஒரு செல்ல பிள்ளையாக நடத்தி வந்தால் ஒருநாள் மிகப்பெரிய அழிவை சந்தித்து நொந்து கொள்ளவேண்டி வரலாம்.

....

Thursday, January 21, 2010

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் - தேர்தல் நாடகமா ?


புலித்தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி உண்மையிலேயே தமிழ் சமுதாய மக்களுக்கு ஒரு இனிப்பான செய்திதான் . ஆனால் இலங்கையில் தேர்தல் வரும் இந்த சமயத்தல் திடிரென ஒரு வெப் சைட் முளைத்து அதில் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் தக்கசமயத்தில் மக்கள் முன் தோன்றி பேசுவார் என்று கூற காரணம் என்ன? அப்படியே இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு செயலையும் மிக துல்லியமாக நேரம் பார்த்து செய்யும் புலிகளுக்கு , தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தங்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்கிற இந்த செய்தி ராஜ பக்சே மீண்டும் (சிங்கள மக்களின் உணர்ச்சிகளை தூண்டி) வெற்றி பெற துணை போகும் என்று தெரியாதா ?

சில
மாதங்களுக்கு முன்பு கம்யுனிச அமைப்பொன்று இன்னும் போர் முடியவில்லை . இனி எங்களின் போர் ராஜ தந்திர வழியில் இருக்கும் என்று கூறியதை போன்று தான் இதுவுமா என தெரிய வில்லை .

சென்னையில் எங்களை போன்றவர்களுக்கு இலங்கை அரசியலின் உண்மை நிலவரம் தெரிய வில்லை ஒரு வேளை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி தேர்தலில் ராஜபக்செவிற்கு மரண அடியாக இருக்குமா என்றும் தெரியவில்லை .

எது எப்படியோ பிரபாகரன் அந்த சிங்களவர் கையில் மாட்டி சாக வில்லை
உயிரோடு தான் இருக்கிறார் என்றால் அது மிக சந்தோசமான விசயம்தான் .

கொசுறு செய்தி :
ராஜபக்செவின் அரசாங்க சோதிடர் ராஜ தேவேந்திரன் இந்த தேர்தலில் அராஜபக்சே கண்டிப்பாக ஜெயிப்பார் என்று கூறி உள்ளார்.

...

Tuesday, January 19, 2010

பின்னூட்ட பகவானே போற்றி !

நாம என்னதான் பிரிச்சி மேஞ்சி எழுதினாலும் அதற்கு பின்னூட்டம் வராவிட்டால் . ? என்ன செய்வது ? என்று  இனி குழம்பி கொண்டு இருக்க வேண்டாம் .

அதற்குதான் நம் முன்னோர்கள் அந்த காலத்திலேய அதற்கு வழியும் கண்டு பிடித்து உள்ளனர் . திருநெல்வேலிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் பின்னூட்ட புரத்தின் நாயகர் தான் பின்னூட்ட பகவன் . முப்பது நாள் விரதமிருந்து தினமும் கலையில் எழுந்ததும் பின்னூட்ட பகவன் போற்றி மந்திரம் சொல்லி வர ,பிளாகில் பின்னூட்டம் வந்து குவிய ஆரம்பிக்கும் . விரதத்தை பின்நூட்டபுரத்திற்கு வந்து தான் முடிக்க வேண்டி இருக்கும்.

உங்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடுவது பின்னூட்ட பகவான் பீடம் .

நம்ம கேப்டன் விஜயகாந்திற்கும், அர்னால்ட் ஸ்வாஷ்நெகர்ருக்கும் சண்டை - புதுப்படம்
















(இந்திய  வலை தள வரலாற்றிலேய முதன் முதலாக இன்னமும் எடுத்து முடிக்காத படம் உங்களுக்காக ...)

நேத்து வந்த ஜெயம் ரவிஎல்லாம் ஹாலிவுட் நடிகர்களோடு சண்டை போட்டு நாட்டை காப்பாத்தும் போது கேப்டன் மட்டும் சும்மாவா , தனது அடுத்த படத்திற்கு இந்தியாவில் (தீவீரவாதிகளே) வில்லன்களே இல்லாததால்  அமெரிக்கா தீவீரவாதிகளிடம் இருந்து இந்தியாவை காப்பாத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார் .

எத்தனை காலத்திற்குத்தான் பாகிஸ்தான் தீவீராவாதிகளையே அடித்து தள்ளுவது , (உதைத்து என்று படிக்கவும்) கையில் துப்பாக்கி இருந்தும்.

இந்தமுறை என்னிடம் அடி, சாரி  உதை   வாங்க அர்னல்டுதான் வேண்டும் என்று கேப்டன் அடம் பிடிக்க வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளரும் தலையில் துண்டை போட்டு கொண்டு அர்னால்டின் கால்ஷீட் வாங்க படம் ஆரம்பிக்கிறது .

படத்தின் கிளைமாக்சில் அர்னால்ட் பெரிய ஆலமர சைசில் துப்பாக்கியை வைத்துகொண்டு கேப்டனை சுடுகிறார் . கேப்டன் லேசாக விலகிக்கொள்ள அது பின்னால் சென்று அங்கு இருக்கும் ஒரு பைப்பை தாக்குகிறது அதிலிருந்து வரும் புகையில் யாருக்கும் கண்ணு மண்ணு தெரியவில்லை ஒரு வழியாக  புகைமூட்டம் களைந்து பார்த்தால் ,அர்னால்டின்  கையில் கேப்டனின் தங்கை , தங்கையின் கையில் ஒரு வயது குழந்தை , அந்த ஒருவயது குழந்தையின் கையில் ஒரு சிரிக்கும் குழந்தை பொம்மை .

இப்போது அர்னால் படு பயங்கராமாக சிரிக்கின்றார் என்ன   
வருங்கால முதல்வரே !  (படத்தில் கேப்டனின் பெயர் ) இப்ப என்ன செய்ய போற கொஞ்சம் அசஞ்சாலும் உன்னோட தங்கச்சி உயிர் அவ்வளவுதான் . மரியாதையா அந்த அணு குண்டு சம்பந்த பட்ட பைல கொடுத்திடு என்கிறார் .

கேப்டன் தன்னுடைய செவ்விழிகளை உருட்டி பார்க்கிறார் . தன் தங்கையை பார்கிறார் . தங்கையின் கையில் இருக்கும் குழந்தையை பார்க்கிறார் , குழந்தையின் கையில் இருக்கும் பொம்மையை  பார்க்கிறார் .இன்டர் கட் ஷாட்டில் கேப்டன் சிறுவயதில் தன் தங்கைக்கு அவள் அழுவதை நிறுத்த ஒரு புது பொம்மையை வாங்கி கொடுக்கிறார் . அந்த பொம்மையை தான்  இப்போது அவளின் குழந்தை  கையில் வைத்து
இருக்கின்றது . என்னதான் தன் பேச்சை கேட்காமல் அவள் வில்லனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டாலும் மாமவின் சீதனமான அந்த பொம்மையை மறக்க வில்லை . அதை நினைத்து கண் கலங்கி தங்கையை பார்க்கிறார் . தங்கையும் அதை புரிந்து கொண்டவளாக தலையை ஆம் என்று ஆட்டுகிறாள்.

யோவ்! எவ்வளவு நேரம்தான் பொறுத்து இருக்கிறது ஒரு கையில இவ்வளவு  பெரிய துப்பாக்கி இன்னொரு கையில உன்னோட தங்கச்சி வலி தாங்க முடியலையா  . சீக்கிரம் கொடுயா .. அந்த பைல .-இது அர்னால்ட் .

கேப்டன் இப்போது ஆரம்பிக்கிறார் .நான் கொடுக்க மாட்டேன் இது காந்தி பிறந்த தேசம் , நேரு வாழ்ந்த தேசம் , இந்திர காந்தி வாழ்ந்த தேசம் , ராஜீவ் காந்தி வாழ்ந்த தேசம்  சோனியா காந்தி வாழ்ற தேசம் ,ராகுல் காந்தி வாழ்ற தேசம் .. இந்த தேசத்துல பிறந்த ஒரு உண்மை தமிழன் உயிர்கூட தருவான் ஆனா அணுகுண்டு ரகசியத்த மட்டும் தரமாட்டன் .

இந்தியாவுல இருபத்து ஒன்பது மாநிலம் இருக்கு ,இப்ப முப்பதாவுதா தெலுங்கானா வரப்போகுது . ஒவ்வொரு மாநிலத்திலும் நாப்பது மாவட்டம் இருக்குது ,அந்த நாப்பது மாவட்டத்திலும் நானூறு கிராமங்க இருக்குது ,ஒவ்வொரு கிராமத்திலும் ரெண்டு குக்கிராமம் இருக்குது . இந்த கிராமத்துள .....பேசிக்கொண்டே திரும்பி பாக்கிறார் அர்நால்ட்  துப்பாக்கியை போட்டு விட்டு தங்கையை விட்டு விட்டு ஓடுகிறார் வேகமாக . விடுவாரா கேப்டன் துரத்துகிறார் .

ஒரு பாழடைந்த கட்டிடத்தினுள் ஓடுகிறார் . கேப்டனும் உள்ளே செல்ல அர்னால்ட் சட்டையை  கழட்டுகிறார்  . கேப்டனும் "மொழ மொழ எம்மா" என்கிற தன்னுடைய உடம்பை காட்ட பனியனுடன் நிற்கிறார் . சண்டை ஆரம்பத்தில் அர்நால்ட் சுழட்டி சுழட்டி அடிக்கிறார் . வாயில் ரத்தம் கக்க கேப்டன் கீழே விழுகிறார் .

இப்போது இந்தியாவே கதறுகிறது . இந்திய ஆர்மி ,நேவி , ஏர் போர்ஸ் தளபதிகளும் கமான் கேப்டன் , கமான் கேப்டன் என்கிறார்கள்  . கண்ணை திறக்கிறார் கண்ணில் அப்படியே மன்மோகன் , சோனியா  வந்து போகிறார்கள் இந்திய தேச வரைப்படம் வந்து போகிறது கூட்டணி கூட்டணி என்கிற வார்த்தை பேக் கிரவுண்டில் கேட்கிறது . இப்போது பல்டி அடித்து எழுந்திருக்கிறார்  கேப்டன் . அர்னால்டை துவம்சம்  செய்கிறார் . இந்தியாவை காப்பாற்றுகிறார்  . மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் கத்துகின்றனர் ,
வருங்கால முதல்வரே , வாழ்க !!

...சுபம்
இந்த படத்தை பற்றிய விமரிசனங்கள் வரவேற்கப்படுகின்றன .தவிர இந்த படத்தை தியேட்டரில் திரையிட உள்நாடு, வெளிநாடு விநியோகிஸ்தர்களும் தேவை .

அடுத்த முறை சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவை காப்பாற்ற 
ஜாக்கி சானோடு மோதுகிறார் நம் கேப்டன் .



...

Wednesday, January 13, 2010

சன் பிக்சர்ஸ் படங்களை நான் டி வி டி யில் தான் பார்ப்பேன்-payapulla


திரைத்துறையை  சேர்ந்த என் நண்பர் ஒருவரிடம் நான் பேசி கொண்டிருந்த போது அவரிடம் என்ன வேட்டை காரன் படம் பார்த்தீர்களா எப்படி இருந்தது ? என்றேன் .

தனிப்பட்ட முறையில் வேட்டைகாரன் எனக்கு புடிக்காவிட்டாலும் சினிமாவை சேர்ந்தவர் ஆயிற்றே அவர் பார்வை எப்படி இருக்கிறது என்கிற ஆவல்தான் .

ஆனால் அவர் பார்க்கவில்லை என்றார் .
எனக்கு ஆச்சரியம் .புதுமுகங்களின் படங்களை கூட
பார்த்துவிடுபவர் ,வேட்டைகாரனை இந்நேரம் பார்த்து இருப்பார் என்றே நினைத்தேன் .

பொதுவாகா இவரைப்போல் துணை இயக்குனர்களாக இருப்பவர்கள் தங்கள் தொழிலின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ள ,வரும் எல்லா படங்களையும் பார்ப்பது வழக்கம் . அதற்கு இவரும் விதிவிலக்கல்ல . ஆனால் இந்த படத்தை பார்க்காததற்கு அவர் சொன்ன காரணம் எனக்கும் ஓரளவிற்கு சரி என்று தான் பட்டது .

அதாகப்பட்டது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்குள் எடுத்த முடிவின் படி திரைப்பட விளம்பரங்களுக்கு  ஒரு கட்டு பாட்டை வைத்துள்ளது . அதன் படி எத்தனை பெரிய தயாரிப்பாளர் ஆனாலும் அவர் தன்னுடைய திரைப்படத்திற்கு செய்தி தாளில் கொடுக்கும் விளம்பரத்தின் அளவு முதல் வாரத்திற்கு இந்த அளவு அடுத்த வாரங்களுக்கு இந்த அளவு என்று வரை படுத்தி அதன் படி தான் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.

அதாவது முதல் வாரத்தில் குவாட்டர் பேஜ் கொடுத்தால் வரும் வாரங்களில் பத்துக்கு பதினைந்து சென்டிமீட்டர் அளவுகளில் தான் விளம்பரம் கொடுக்க முடியும் .இது எல்லோருக்கும் பொருந்தும் . இதன் மூலம் அதிக விளம்பரம் கொடுத்துவிட்டு படம் ஊத்தி கொண்டால் பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பது தடுக்கப்பட்டது . தவிர சின்ன பெரிய தயாரிப்பாளர்களுக்கு  இடையே  விளம்பரம் செய்வதில் இருந்த இடைவெளி  குறைக்கப்பட்டது  .

ஆனால் சன் பிக்சர்ஸ் வந்ததும் என்னவாயிற்று  அவர்கள் எடுக்கும் படங்களுக்கு தங்கள் சேனலில் மகா பயங்கரமாக விளம்பரம் கொடுத்து பின்னி எடுக்கின்றனர் . இதனால் சின்ன தயாரிப்பாளர்கள் விளம்பர விஷயத்தில் மிகவும்
பாதிக்கப்படுகின்றனர் . அவர்களால் சன் சேனலில் அவர்கள் சொல்லும்
யானை விலை ,குதிரை விலைக்கு . விளம்பரம் செய்ய முடியுமா ? செய்தால் தான் கட்டு படி யாகுமா ? சன் பிக்சர்சால்   தமிழ் திரை உலகம் ஓட்டு மொத்தமாக பாதிக்க பட ஆரம்பித்து உள்ளது .

இந்த செய்தியை சொன்னவரிடம்  நீங்கள் படம் பார்க்கா  விட்டால் அவர்களுக்கு என்ன கோடி கணக்கிலா நஷ்டம் வந்து விடபோகிறதா  ? என்றேன் .

  நான் படங்களை பார்க்க மாட்டேன்  என்று சொல்லவில்லை  சன் பிக்சர்சின்  படங்களை  இனி டிவிடி இல்தான் பார்க்க  வேண்டும் என முடிவு செய்துள்ளேன் இது நான் எதிர்ப்பை காட்டும் வெளிப்பாடு என்றார்

அடப்பாவி உள்ளுக்குள்ள ஒரு எரிமலையே வெச்சிருக்காரே என்று நினைத்து கொண்டு ஏன் டிவிடி இன்னும் கிடைக்க வில்லையா என்றேன் . கொஞ்சம் பொறுத்திருந்தால் கண்ணில் ஒற்றி கொள்ளும் அளவிற்கு பாரின்  பிரின்ட் கிடைக்கும் என்றார்.

நல்ல தெளிவாதான்ய இருக்காங்க .

...

Tuesday, January 12, 2010

மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது

நானும் ரொம்ப நாளாக நம் வலைதளத்தை பார்த்து கொண்டுதான் வருகிறேன். நம் பதிவர்களுக்குள் ஒரு சண்டையும் காணோம் . எல்லோரும்  ஆக்க பூர்வமாகவே பதிவை எழுதி கொண்டு வருவதை பார்த்தால் , நாம் தமிழர்கள் தானா  என்று தோன்றுகிறது. ஒரு சக்திவேல் நான் விடை பெறுகிறேன் என்று ஓடி போனார் .

அடுத்து என்ன ஒரு கார சாரமே இல்லாமல் தமிழ்மண பதிவுகள் போய்கொண்டு இருக்கிறது .வாங்க சார் சண்ட போடலாம் . நீங்க எதாவது எழுதுங்க நான் பதில் எழுதறேன் . நாம கீபோர்டில் சண்டை போடலாம் .

எல்லாரும்  பாருங்க நானும் ரவுடிதான் .


நல்ல பிளாகர் , கெட்ட பிளாகர் , குசும்பர்கள் , உள்நாட்டவர் , வெளிநாட்டில் இருப்பவர்கள் , அடுத்தவரை சில்மிஷம் பண்ணுபவர்கள் புது பிளாகர்கள் பழைய பிளாகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் .

...

Thursday, January 7, 2010

சிங்களவர்களின் ஆதிக்கம் சென்னையிலும் - ஒரு சம்பவம் .

நான் சமீபத்தில் பெங்களூரு போகலாம் என்று ஒரு ஆம்னி பேருந்தில் டிக்கெட் புக் பண்ணி இருந்தேன் . பயணம் செய்யும் அன்று வண்டியில் ஏறினால் வண்டியின் முதல் வரிசை தொடங்கி ஒரு எட்டு வரிசையில் காட்டு மிராண்டிகளை போன்ற ஒரு கும்பல் உட்கார்ந்து காச் மூச் என் பேசி கொண்டிருந்தது.

வண்டியில் ஏறும்போதே ஒருவன் எதிரில் தொடையின் பெரும் பகுதி தெரிய அரை டவுசர் போட்டு கொண்டும் தான் போட்டிருந்த டி ஷர்டை நெஞ்சு வரைக்கும் தூக்கி விட்டும் தொப்புளை காட்டி உட்கார்ந்து கொண்டிருந்தான் .

என்னுடைய சீட்டான ஐந்தாம் எண் சீட்டும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது . என்னுடைய சீட்டில் ஒரு குண்டு கொழுக்கட்டையாக ஒருவனும் இன்னொரு வனும் உட்கார்ந்து இருந்தனர் . இது என்னுடைய சீட்டு என்று சொல்லியும் கேட்காமல் உட்கார்ந்து இருந்தனர் . நான் பஸ்சின் கிளினரிடம் சொல்லி அவன் வந்து சொன்ன பிறகும் வேண்டா வெறுப்புடன் ஒருவன் எழுந்து போனான் அனால் அந்த குண்டு கொழக்கட்டை யோ வேண்டும் என்று இரண்டு சீட்டையும் அடைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தான் .

அவர்களில் பெருபாலானவர்கள் அரை டிராயர் டி ஷர்ட் என எதோ கபடிவிளையாட வந்தவர்களைப் போன்று இருந்தனர். எனக்கு அந்த குண்டனின் பக்கத்தில் உட்கார விருப்பமே இல்லாததால் திரும்ப வந்து விட்டேன் . இதை விட கொடுமை தனியாக வந்த ஒரு பெண்ணும் என்ன செய்வது என்று உட்கார மனமில்லாமல் இருந்தார் . நான் அடுத்த பஸ்ஸில் செல்வதாக சொன்னதும் அவரும் அடுத்த பஸ்ஸில் வந்தார்.

அந்த சிங்களவர்கள் அந்த பெண் உட்கார கொஞ்சம் கூட இடம் தராமல் , அதாவது முன் சீட்டை விட்டு எழுந்து போக வேண்டும் . ஆனால் நாங்கள் குருப்பாக வந்துள்ளோம் இல்லாவிட்டால் நாங்கள் வேறு பஸ்ஸில் போகிறோம் என்று கூறி கொண்டிருந்தனர்.

நான் முதலில் அவர்களை வட நாட்டவர் பீகார் போன்ற மாநிலத்தில் இருந்து வந்து இருக்கலாம் என்று தான் எண்ணினேன் கீழே இறங்கி வந்த போது தான் சொன்னார்கள் அவர்கள் சிங்களவர்கள் என்று.

தமிழகத்திலேயே இத்தனை ஆட்டம் போடும் இந்த காட்டு மிராண்டிகள் இலங்கையில் எப்படி நடந்து கொள்வார்கள் என நினைத்து கொண்டேன். தமிழகத்தில் கூட என உரிமையை நிலை நாட்ட முடிய வில்லை .

இலங்கையில் .....???


.....

Tuesday, January 5, 2010

மணிரத்னம் ஒரு மகத்தான இயக்குனர்


நாலு பாட்டு , ஐந்து சண்டை அப்புறம் கொஞ்சம் காமடி என்று போய்கொண்டிருக்காமல் தன்னுடைய இயக்குனர் பாதையை சிறப்பாக அமைத்து கொண்ட இயக்குனர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர் இந்த மணியானவர் .
அவருடைய படங்களில் மௌன ராகம் , நாயகன் , தளபதி (கொஞ்சம் கமஷியல் கலந்தாலும்) ரோஜா , பாம்பே , கன்னத்தில் முத்தமிட்டால் ... போன்றவே அவரை உலக அளவில் மிக சிறந்த இயக்குனர்களுள் ஒன்றாக மாற்றி விட்டது எனலாம்.

அவர் கதையை கையாளும் விதத்தில் ஒரு மென்மையும் இருப்பதால்தான் ராம் கோபால் வர்மாவை விட கொஞ்சம் மேலே இருப்பதாக தெரிகிறது. அவர் படத்தின் நாயகன் , நாயகிகள் உடைகள் அவர்களின் பாத்திர படைப்புகளுக்கு மிக சரியாக இருப்பதும் அவரின் வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று எனலாம்.

அதேப்போல் இளைய ராஜாவின் பாடல்களுக்கு அவரின் காட்சியமைப்பு அதையொரு கவிதையாக்கி விடுவதை காணலாம்.

மணிரத்தினம் அவர்களின் படங்களை இனி வரும் பதிவுகளில் நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

பழைய சோறுதான் கொஞ்சம் சூடு படுத்தி தருகிறேன்.

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா