Thursday, November 26, 2009

பிரபாகரனை வைத்து பணம் பண்ணும் பத்திரிக்கைகள்


புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு விடியலை பெற்று தருவார் என்று எல்லாம் எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் இப்படி அற்ப ஆயுளில் சென்று விட்டதை எண்ணி உள்ளுக்குள் புழுங்குவதை யாரிடம் சொல்ல என்று கலைஞர் சமிபத்தில் அறிக்கை வெளி இட்டு இருந்ததை படித்ததின் மூலம் பிரபாகரனின் மரணத்தை ஒரு வழியாக தமிழக அரசு உறுதி படுத்தி விட்டதாக கொள்ளலாம் .

இப்போது ஒரு விடயம் என் மனதிற்குள் வந்து செல்கிறது . நக்கீரனில் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் இது ஆயிரம் ஆயிரம் மடங்கு உண்மை என்ற செய்தி என்னவானது. வந்த பத்து நிமிடத்தில் வித்து தீர்த்தது நக்கீரன் . நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறும் நக்கீரர் ! இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார். ஆனால் ஆங்கில நாவலை தாண்டிய விறுவிறுப்பு இருந்தது அந்த கதையில். சபாஷ் நக்கீரரே.

பிரபாகரன் மரணம் என்பதை அன்று இருந்த சூழ்நிலையில் எவரும் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை .அதை நன்கு பயன்படுத்தி கொண்ட கோபால் அவர்களுக்கு நன்றி பணமாகுக .

பிரபாகரனின் படத்தை போட்டாலே பத்திரிகை விற்று தீர்ந்திடும் மாயத்தை கண்டு பிடித்து விட்ட பத்திரிக்கைகள் வாரம் ஒன்றாக செய்தி வெளியிட்டு தங்கள் ஈழ தாகத்தை பணம் குடித்து தீர்த்து கொள்கின்றன . ஆனந்த விகடனில் வாரம் ஒரு பிரபாகரன் செய்தி தவறாமல் இடம் பிடிக்கிறது . அவரின் படம் போஸ்டரில் தொங்குகிறது. இதில் குமுதமும் தான் சளைத்தது இல்லை என்கிறது. நக்கீரனை பற்றி சொல்ல வேண்டாம்.

ஆக மொத்தம் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்கிறதை போல செத்தும் வாழ வைத்து கொண்டு இருகிறார் பிரபாகரன் இந்த உண்மை தமிழர்களை.

குறிப்பு : இந்த செய்தியை பிளாகில் எழுதுவதன் மூலம் என்னுடைய நோக்கமும் இப்படித்தான் இருக்கின்றதோ ?


.....
....
...

Sunday, November 1, 2009

தமிழக எம் பி -களின் இலங்கை பயணம் - இந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படம் .


திரை விமர்சனம் - தமிழக எம் பி களின் இலங்கை பயணம் .

நடிப்பு : டி.ஆர். பாலு , கனி மொழி , திருமாவளவன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் .

எழுத்து, இயக்கம் - திரு . கலைஞர் கருணாநிதி .

மதிப்பெண் : 100


சினிமாவில் திரைக்கதை வசனம் எழுதி பிரபலமான அதன் மூலம் முதல்வரும் ஆன திரு கருணாநிதி அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தள்ளாத வயதிலும் , பல வேலை பளுகளுக்கு மத்தியிலும் ஒரு அழகான , உயிரோட்டமான காவியத்தை படைத்திருக்கிறார் .

கதைப்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு பதினோரு எம். பி. கள் இலங்கை சென்று அங்கு கஷ்டத்தில் இருக்கும் ஈழ தமிழர்களின் பாடுகளை அறிந்து அவர்களுக்கு பலவிதமான உதவிகளை செய்கின்றனர்.

கதை என்னவோ சிறியதாக இருந்தாலும் அதை கையாண்ட விதம் கலைஞரின் கற்பனை திறனையும் , அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது . கலைஞர் ஒரு புறம் சிறந்து விளங்குகிறார் என்றால் டி. ஆர் . பாலு மறுபுறம் தன் நடிப்பில் பிச்சு உதறுகிறார் . ஒரு சில இடங்களில் அவர் பேசிய பல வில்லத்தனமான வசனங்களை எடிட் செய்து எடுத்து விடாமல் இருந்திருந்தால் இன்னமும் அவர் நடிப்பின் பரிமாணம் நன்கு வெளிப்படிருக்கும் .

தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது கனி மொழிக்கு பொருந்தும் . ஒரு சில அழும் காட்சிகளில் அவருடை முன்னேற்றம் தெரிகிறது.

தேடி போய் ஆப்பு வைத்து கொள்ளும் கேரக்டர் திருமாவளவனிற்கு. அதனை நன்றாக செய்துள்ளார் . வில்லன் ராஜ பக்ஷே வைத்த ஆப்புவை வாங்கிய பிறகு அவர் பேசும் டயலாக்கில் தியேட்டர் அதிருகிறது . கீப் இட் அப். திருமா அவர்களே

படத்தின் முடிவில் வில்லன் ராஜ பக்ஷே நாயகர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று இயக்குனர் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

படத்தில் இதைப்போல் ஒரு சில குறை பாடுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்த்தால் இது ஒரு மிக சிறந்த படம் என்பதில் சந்தேகம் இல்லை .

கலைஞரின் ஆஸ்காரை தாண்டிய சாதனை இது.

நன்றி கலைஞர் அவர்களே உங்களிடம் இருந்து இதைப் போல் இன்னும் பல காவியங்களை எதிர் பார்க்கிறோம் .அதைப்போல் தங்களின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் இருக்கும் அடுத்த படைப்பான முல்லை பெரியார் அணை என்கிற திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

பயபுள்ள விமரிசன குழு
.


கிசு கிசு :
கலைஞரின் அடுத்த படைப்பான முல்லை பெரியார் அணை பல திருப்பங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது . அதில் ஒரு காட்சியில் நாயகன் வில்லனை பணியவைக்க மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட நினைக்கிறான் . இதை புரிந்து கொண்ட வில்லன் நாயகனுக்கு டெல்லியில் செக் வைக்கிறான் . அதை தொடர்ந்து நாயகனின் கூட்டம் ரத்தாகிறது.

இந்த திரை விமர்சனத்தை பற்றிய உங்களின் விமர்சனம் வரவேற்கப்படுகிறது .


......
.....

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா