Friday, February 5, 2010

தாக்ரே குடும்பத்தை என்கவுண்டரில் போட்டு தாக்க வேண்டும்


ஒரு மூணு தாதாக்கள் மும்பையையே கலக்கி கொண்டு இருக்கின்றார்கள் அங்கு இருக்கும் அரசாங்கத்தின் கைகளோ பூ பறித்து கொண்டு இருக்கிறது . என்ன கொடும சார் இது .

பால் தாக்கரே , உத்தவ் தாக்கரே , ராஜ் தாக்கரே என்கிற தாதாக்களின் தொல்லை மும்பை வாசிகளை பாடாய் படுத்தி எடுக்கிறது .

கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்துகொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்குவது அவர்கள் சொல்வதைத்தான் அந்த மாநிலம் கேட்க வேண்டும் என்று அராஜகம் செய்வது என ஒரு எல்லையே இல்லாமல் நடந்து கொள்ளும் இந்த குடும்பத்தை தட்டி கேட்க ஒரு ஆண் மகன் இல்லை அங்கு.

மகாராஷ்ட்ரம் மரத்தியற்கே என்று சொல்லும் இந்த அராஜக அறிவு ஜீவிகள் ஆஸ்த்ரேலியாவில் இன வெறி தாக்குதல் நடப்பதால் ஐ பி யல் கிரிக்கெட் தொடருக்கு ஆஸ்த்ரேலிய வீரர்கள் பங்கு பெற விடமாட்டோம் என கூக்குரல் இடுகிறார்கள் . ஆஸ்த்ரேலியாவில் நடப்பது இன வெறி தாக்குதல் என்றால் மகாராஷ்ட்ராவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் மீது இவர்கள் நடத்தும் தாக்குதல் மட்டும் என்ன தேச ஒற்றுமை தாக்குதலா ?

என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இவர்கள் என்ன செய்தாலும் கையை கட்டி வேடிக்கை பார்க்கும் தூமை அரசாங்கமாக ஒரு அரசு நடை பெறுவதுதான் . பால் தாக்ரே அன் கோ வின் சிவா சேனா ராஜ் தாக்ரேவின் எம் என் எஸ் தான் அங்கு உண்மையான அரசாங்கமாக செயல்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயம் .

வட மாநில மக்களுக்கு மத ரீதியான உணர்வுகள் இருப்பதினால்தான் இதை போன்ற குண்டர்கள் ஒரு அரசாங்கத்தை அசைத்து பார்க்க முடிகிறது . தமிழ் நாட்டில் பெரியார் மத உணர்வுக்கு மிகப்பெரிய கடிவாளம் போட்டதை போன்று அங்கு யாரும் தோன்றாததுதான் அந்த மக்களின் மிகப் பெரிய குறை பாடே .

பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் ரவுடிகளை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது வழக்கம் .அதைப் போன்று நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் இவர்களை போன்ற குண்டர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளுவது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் பயக்கும் .


இன்னும்
போட்டு தள்ள வேண்டிய சில லிஸ்டுகள்


பாராளு மன்றத்தை தாக்க உதவிய அப்சல் குரு.
தெலுங்கானா லொள்ளு சந்திர சேகர்
பாக். தீவிரவாதி அஜ்மல் கேசாப்

....

Wednesday, February 3, 2010

எனக்கும் கவிதை எழுத ஆசை

வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
கவிதையை விதைத்தவன் எதை அறுப்பான் ?
கழுத்தை .

இந்த கவிதையை என்னுடைய பள்ளிகூட நாட்களில் படித்தது .

எனக்கும்

ரோட்டில் ஒருவன் போய் கொண்டிருந்தான்
அவன் வயிறு ஒட்டி
கண்களும் உள்ளபோய்
எலும்புகள் மட்டும் மூடப்பட்டிருந்தது
தோல்களால்
நான் ஏதாவது கொடுக்க நினைத்தேன்
என் கையிலும் காசு இல்லை
மனது ஈர மாகியது
அதோ தூர தெரியும் காய்ந்த பனை மரங்களாய்
நாங்கள் இருவரும் .

என்பதை போன்ற புரிந்தும் புரியாத கவிதைகளை எழுதி உங்களையும் குழப்பி நானும் குழம்ப ஆசைதான் . விதி யாரை விட்டது .

என்னுடைய சிறு வயதில் கவிதை எழுதுவதும் , படிப்பதும் மிகவும் பிடித்த மான விஷயங்களாக இருந்தது . ஐந்தாவது படிக்கும் போது "எங்க விட்டு பாப்பா அழுவாத பாப்பா தூங்காத பாப்பா" என்பதை போன்று கவிதை எழுதியது உண்டு .

கல்லூரி இதழில்"
செந்தமிழ் தாயே உன்னை
சிறப்பு மிகு சீராட்டி
வனப்பு மிகு வாழ வைக்க ஆசைதான்
ஆனால் ஆசை மிகு வாழ்க்கை நான் வாழ
ஆங்கில மனைவி எனக்கு தேவை
ஆதலால்
மன்னிப்பாய இந்த
மானங்கெட்ட தமிழ் மகனை "

என்றும் கிறுக்கியது உண்டு . பிறகு 1995 ல் பாக்கியா வார இதழில் வரதட்சணையை பற்றி நான்எழுதிய
"விலைமகன் " கவிதை என்னுடைய போட்டோவுடன் வந்ததும் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .(அதற்கான பரிசு தொகையான ரூ 101 இன்னும் வந்து சேரவில்லை ) இந்த உலகிலே நான்தான் மிகப்பெரிய கவிப் பேரரசு என்பதாய் நினைத்து கொண்டிருந்தேன் . ஆனால் நாளாக நாளாக வார இதழ்களில் கவிதையாக வருபவற்றை படித்ததில் கவிதை மேல் இருந்த ஆர்வம் போயே விட்டது . தவிர கவிதை எழுதுபவர்கள் என்றால் தாடி வைத்து ஜோல்னா பை மாட்டுபவர்கள் என்கிற எண்ணமும் கவிதை அலர்ஜியை உண்டாக்கியது .

ஆனால் இப்போது பவர்களின் பதிவுகளில் வரும் கவிதைகளை படிக்கும் போது எனக்கு திரும்பவும் கவிதையின் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகியுள்ளது .

நன்றி கவிதை பதிவர்களே.

ஸோ இனிமேல் நானும் கவித கவித என்று புலம்பலாம் .

....

Monday, February 1, 2010

தெலுங்கானா மாநிலம் தேவையா ?



அறுபது வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது இந்த தெலுங்கானா பிரச்சனை மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் அந்த மொழிகளுக்குள்ளே இப்போது பிரிவினை உண்டாகி தனி இனங்களாக தனி கலாசாரம் உடையவர்களாக தங்களை பிரித்து கொண்டு நாட்டையும் பிரிவினைக்குள்ளாக அழைத்து செல்கின்றனர்.

இந்தியா ஒரு நாடாக இல்லாத போது ஒரு சில பேரரசர்களே இந்தியா முழுமைக்கும் வெற்றி கொண்டு ஆட்சி நடத்தி கொண்டு இருந்தனர் . அப்படியும் அவர்கள் இருந்த இடத்தை தவிர மற்ற இடங்கள் எல்லாம் தான் கைப்பற்றிய வேறு நாடாகத்தான் அந்த மன்னன் நினைத்தான் . அந்த பேரரசனின் மறைவிற்கு பிறகு அவன் கைப்பற்றிய பகுதிகள் எல்லாம் பெரும்பாலும் தனி நாடாகத்தான் இருந்தன. ஒரு சில ராஜ்யங்கள் பெரிய ராஜாக்களுக்கு கப்பம் கட்டியும் தவிர போர் வரும் போது அவனுக்கு படை உதவி செய்தும் ( ஒரு வேலை எந்த ஒரு சூழ்ச்சியும் நடைபெறாத போது ) வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சி இங்கு ஏற்பட்டதன் விளைவாகத்தான் இந்தியா என்கிற ஒரு நாடு உருவானது . பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாயின. மாநிலம் என்பது
ஒரு குறுப்பிட்ட அளவிற்கு பெரியதாக இருப்பதுதான் அந்த மாநிலத்திற்கு நல்லது . இல்லாவிட்டால் அங்கு ஜனநாயகம் என்பது இல்லாமல் போய் அது ஒரு குடும்பத்தின் சொத்தாக ஆகும் அவலம் ஏற்படும். ஒரு மாநிலத்தில் பல்வேறு விதமான கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் இருப்பதுதான் ஆட்சி மாறி மாறி வர துணை புரியும் .

தமிழகம் ஒரு பெரிய மாநிலமாக இருந்தாலும் ஆட்சி பலத்தில் ஒரு குடும்பம் அரசியல் , ஊடகம் , சினிமா , தொழில் என எல்லாத்திலும் ஆதிக்கம் செழித்தி வருவது தவிர்க்க முடிய வில்லை . சிறுபான்மை அரசாக இருப்பதிற்கே இந்த நிலை என்றால் ... பிறகு புரிந்து கொள்ளுங்கள் .

குட்டி குட்டி மாநிலங்கள் உருவாக உருவாக குறுநில மன்னர்கள் உருவாவது தடுக்க முடியாது. எல்லா முன்னேற்ற கழகங்களும் கம்பெனிகளாக மாறி வரும் சுழலில் இது நாட்டிற்கு நல்லது இல்லை என்பது தான் உண்மை.

தெலுங்கானா சந்திர சேகர் தனி மாநிலம் கிடைத்ததும் முதலில் முதல்வர் ஆவார் பிறகு அவர் குடும்பமே வழி வழியாக அந்த மாநிலத்தை ஆளும் தகுதி பெரும் . இப்போது போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு பிறகு எந்த வித்தியாசமும் தெரியபோவதில்லை . அந்த மாநிலத்தின் பெயரும் லோகோவும் மாறி இருப்பதை தவிர . இப்போதாவது ஒரு ஆட்சி போனால் மற்றோண்டிற்கு வாய்ப்பு இருக்கலாம் . ஆனால் பிறகு அதுவும் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. குட்டி மாநிலங்கள் மத்திய அரசிடம் பல நேரங்களில் மல்லு கட்ட வேண்டி வரலாம் .

மாநிலத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு பிரிவினர் நினைத்தால் அதற்காக போராடலாம் ஆனால் அதற்காக இப்படியே ஒவ்வொரு மாநிலத்தையும் பிரித்து கொண்டே போனால் இரண்டு விஷயங்கள் உண்மையாகலாம்.

ஒன்று : இந்தியர்களுக்கு தங்களை ஆண்டு கொள்ள தெரியாது என்ற
வெள்ளை காரனின் வாதம் .

மற்றொண்டு : இந்தியாவை சிறு சிறு நாடாக உடைக்க வேண்டும் என்று
வெப்சைட்டில் எழுதி வரும் சீனர்களின் கனவு .

........

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா