Friday, September 18, 2009

நேரு செய்த தப்பும் செவிடன் காதில் ஊதிய சங்கும் .

விழித்திரு ! எதிரி வருகிறான் .

இந்த தேசம் கண்ணீர் வடிக்கிறது!
என்றுதான் இந்த நாட்டிற்கு ஒரு ஒரு வீரமும் விவேகமும் கலந்த ஒரு தலைவன் கிடைப்பானோ என்று .

நாளா புறமும் வளைத்து கொண்டிருக்கிறான் சீனாக்காரன் . நம்முடைய ஆட்சியாளர்கள் இப்போதுதான் விமானத்தில் மூன்றாம் வகுப்பில் போகலாமா என்பதை பற்றி பேச்சி கொண்டு இருக்கிறார்கள்.

சிக்கிமில் சீன இராணுவம் சுட்டு நம் வீர்கள் இருவர் படு காயம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள் . லடேக்கில் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் வந்து சீனா என்று அங்குள்ள பாறைகளில் சிவப்பு கலரில் எழுதிவிட்டு போகிறார்கள் . அருணாச்சல் பிரதேசத்தில் எந்த ஒரு வசதிகள் செய்தாலும் அதனை கடுமையாக எதிர்க்கிறார்கள் . இந்தியாவை சுற்றி ஒரு வலை பின்னல் போல் சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிப்பவர்கள் தூங்கி வழிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இங்கிருக்கும் "காட்டு கத்தல் கம்யுனிஸ்டுகள்" இதற்கெல்லாம் வாயே திறக்க வில்லை. சீன ஆக்கிரமிப்பை குறித்து நடக்க இருந்த கூட்டத்தை கூட தள்ளி வைத்து விட்டார்கள் நம் தலைவர்கள் . எவ்வளவு முன்னெச்சரிக்கை.

சீன அரசாங்கம் ஒரு சர்வாதிகார கொள்கை உடைய பயங்கர ராணுவ பலம் கொண்ட ஒரு முரட்டு அரசாங்கம் அதனை எதிர் கொள்ள நாம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் . இந்திய முழுவதும் அலறுகிறது . நம் ஆட்சியாளர்களை
தவிர . சீனர்களை நம்பி நம்முடைய அயலுறவு கொள்கை மென்மையாக இருக்கலாகாது.


இந்த தூங்க மூஞ்சி நிலை நீடித்தால் இந்தியா ஒரு கோழைத்தனமான தோல்வியை வலு கட்டாயமாக ஏற்கவேண்டி இருக்கும்.

நேரு காலத்தில் ராணுவத்தை நவின படுத்தாமலும் , தயார் நிலையில் வைத்திருக்காமலும் இருந்ததால் கேவலமாக சீனாவிடம் அடி வாங்க வேண்டி இருந்தது . அந்த துக்கத்தில் அவரும் போய் சேர்ந்தார் .

இப்போது இருக்கும் அரசாங்கமும் நேரு செய்த அந்த தவறையே செய்த கொண்டு
இருக்கிறது . இந்தியாவே கூக்குரல் இட்டும் அது செவிடன் காதில் ஊதும் சங்காக தான் உள்ளது.

உண்மையிலேய இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன் ...

...

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா