Friday, July 17, 2009

நான் பிரபல பதிவர் வந்திருக்கேன்.


நூத்து கணக்கான பின்னுட்டங்கள், வாசகர் பரிந்துரையில் தமிழ்மணம் மகுடம் எங்கு பாத்தாலும் என்னுடைய பதிவை பத்தியே பேச்சு என நான் ரொம்ப ஆசைப்பட்டாலும் அதுக்கு கொஞ்சம் குறைய நம்முடைய வலைப்பதிவர்கள் வந்து
டேய் மக்கா நீயும் பிரபலம் தான்டா
சும்மா பட்டையை கிளப்பு என முதுகில் தட்டி சொன்னதும்
கொக்கு பர பர , மைனா பர பர என மனது ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

பயப்புள்ள இப்ப நீ தனி ஆளு இல்ல , உனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்குடா

உண்மையிலேயே பிரபலமாக இருக்கும் பதிவர்களின் காதிலிருந்து வரும் புகைகளுக்கு நான் பொறுப்பல்ல .

இந்த பயப்புள்ளயையும் ஒரு மனுஷனா மதிச்சி பின்னுட்டம் போட்ட நல்ல பிரபல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

இனியாவது ஒழுங்கா யோசிச்சி நல்ல எழுத பாரு என்ன தெரியுதா என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

சரிங்க்ணா .

...

3 comments:

துளசி கோபால் said...

எப்டீங்க இப்டீயெல்லாம்:-)))))

payapulla said...

அதுவா தானா வருதுங் ணா.

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள்

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா