Tuesday, June 30, 2009

மேல் மாடி காலி அதி சீக்கிரத்தில் !!!

நானும் யோசித்து யோசித்து மண்டை வலித்ததுதான் பாக்கி , உருப்புடியா ஏதாவது தோனனுமே! ம்ம் ஹும். ஒண்ணுத்தையும் காணோம். ஒரு நாலு பதிவு போட்டதுக்கே , காவிரி ஆத்து படுக்கையாய் மண்டை வறண்டு போனதை என்னத்த சொல்ல . எதை பத்தி எழுதலாம்னு நானும் யோசிக்க எதுவுமே எனக்கு திருப்பதி அளிக்காமல் இத்தனை நாளையும் ஓட்டியாச்சி!

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்துக்கு பிறகு இந்திய செய்திகள் எனக்கு முக்கியம் இல்லாமல் போய்விட்டது. பேச்சிவார்த்தையை கோழைத்தனமாக இந்தியா துவக்கியமைக்கு , மேற்கு வங்கம் மாவோயிஸ்டுகள் பிரச்சனை , ஆஸ்திரேலேயாவில் இந்தியமாணவர்கள் தாக்கப்பட்ட விஷயம் , கிரிக்கெட் போன்ற பல இருந்தாலும் எழுததான் பிடிக்க வில்லை.

சென்ற முறை மாடலிங் பற்றி எழுதியபோது மேலும் பல விஷயங்களை அடுத்த பதிவில் சொல்வதாக ரொம்ப சவுடாலா எழுதி இருந்தேன் . ஆனால் அதற்கு ஒரு மவராசன் கூட பின்னுட்டம் இடாததால் , போவாத ஊருக்கு வழி காட்டாதடா பேராண்டின்னு ஒன்னு விட்ட பாட்டி கனவில் வந்து சொல்ல , விட்டு விட்டேன் .

சமீபத்தில் அரசு பேருந்தில் இருபத்து கிலோமீட்டர் வேகத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற கதையை எழுதலாம் என்றால் அதற்குள் வேறு ஒரு பதிவர் , இதை போன்ற ஒரு அனுபவத்தை தனியார் பேருந்தில் அனுபவித்ததை எழுதி இருந்தார் . அதனால் அதையும் எழுத முடியவில்லை . என்னடா என்னோட நிலமா இப்படி ஆயிடுச்சே
அப்படின்னு திரும்பவும் யோசிக்க ஆரம்பித்து உள்ளேன் . ம் எதை பத்தி எழுதலாம் (மண்டையை பிச்சி கொண்டு)

நீங்கதான் சொல்லுங்களேன்.


மொத்ததில விஷயமே இல்லாத ஒரு விஷயத்தை நானும் எழுதினுகீரன் . நீங்களும் அத்த படிச்சிகினுகீரிங்க .
எனிக்கிதான் வேல இல்லினா வுங்க்ளுக்க்மா ?
கோச்சிக்காதிங்க சும்மா தான்


அப்பாடா!!! ஒரு வழியாய் பதிவு போட ஒரு மேட்டர் ரெடி!

No comments:

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா