Saturday, January 30, 2010

இந்தியாவின் செல்லபிள்ளை - பாக்கிஸ்தான்


















நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ஆனால் நீ செய்தால் அவ்வளவுதான் என்று வீட்டின் கடை குட்டி அடிக்கும் லூட்டி தான் பாக்கிஸ்தான் இப்போது அடித்து கொண்டு இருக்கிறது.

26/11 தீவீரவாத தாக்குதலுக்கு இன்னமும் உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தான் அரசியல் பபூன்கள் ,
ஐ . பி. எல் -லில் பாக்கிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் இந்தியா புறக்கணித்துவிட்டது என்று கண்ணீர் வடிக்கின்றனர் .

நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் செத்து மடிந்த விஷயம் அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை . ஆனால் தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் போனி ஆகவில்லை என்று மட்டும் கூப்பாடு போடுகின்றனர். அதற்கு ஷாருக்கான் போன்றவர்களின் சப்பை கட்டு வேறு. இதில் அரசாங்கத்திற்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாக். வீரகளை சேர்த்து கொண்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் .அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்று கூறும்போது அதைப்பற்றி கருத்து மட்டும் ஏன் கூறவேண்டும்.

உடனே நார்த் இந்தியாவின் கேமரா நீதிமன்றங்களான மீடியாக்கள் இதனை ஒரு விஷயமாக எடுத்துகொண்டு பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் கருத்து கேட்கின்றனர்.

இந்தியாவில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் வெளி நாட்டு வீரர்களை சேர்த்து கொள்வதும் , கொள்ளாமல் இருப்பதும் நமது தனிப்பட்ட உரிமை . அதை கேள்வி கேட்க அடுத்த நாட்டிற்கு எந்த வித உரிமையும் இல்லை . குறிப்பாக பாகிஸ்தானிற்கு கொஞ்சம் கூட அறுகதை இல்லை.

இந்தியாவில் தீவீரவாத செயல்களை கட்டவிழ்த்து விடும் நாடாகவும் , இந்தியாவிற்கு செக் வைப்பதற்காக சீனாவிற்கு உதவி செய்து வரும் நாடாகவும் இருந்து கொண்டு இப்படி உரிமையையும் கேட்கிறது பாக்கிஸ்தான் . அதற்கு பொறுப்பாக பதில் சொல்லி கொண்டு இருக்கிறது இந்தியா .

லண்டனில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரோஷியை தான் சந்திக்க ஆவலாக இருப்பதாக எஸ் . எம். கிருஷ்ணா சொல்கிறார் உடனே குரோஷி தான் சந்திக்க போவதில்லை என்கிறார் . இப்போது கிருஷ்ணா பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சு வார்த்தை என்கிறார். ஏன் இந்த முரண்பாடு நம் அமைச்சரிடம்.

ஒருவேளை இந்தியாவின் ஆட்சியாளர் மனதில் ஐ நா சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கிற வரையில் இப்படிதான் நயந்து போக வேண்டும் என நினைப்பிருந்தால் அது ஒரு தவறான அரசியல் தந்திரமாகத்தான் இருக்கும்.

சென்ற ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற ஐ நா சபை விவாதத்தில் சீனாவின் ஆதரவை கோர சிங் சீன பிரதமர் வெண் ஜியாபோவிற்கு போன் போடா அவர் எடுக்கவே இல்லை . ஆனால் அதற்காக சீனாவின் உறவையா முறித்து கொண்டோம். மாறாக உலக வெப்பமயமாதல் கொபன்கேகம் மாநாட்டில் சீனாவோடு இந்தியா ஒத்துழைத்தது .


அதே போல் பாகிஸ்தானை இந்தியா மிக எச்சரிக்கையோடு கையாளாமல் அதனை ஒரு செல்ல பிள்ளையாக நடத்தி வந்தால் ஒருநாள் மிகப்பெரிய அழிவை சந்தித்து நொந்து கொள்ளவேண்டி வரலாம்.

....

2 comments:

ரிஷபன் said...

இரண்டுமே நமக்கு என்றைக்கிருந்தாலும் பிரச்னைதான்

payapulla said...

ஆனால் நம் அரசியல் தலைவர்களுக்கு இது எல்லாம் ஒரு விஷயமாகவே தெரியவில்லை. அவர்களின் குறிக்கோள் காந்தி தாத்தா மட்டுமே .

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா