Tuesday, January 5, 2010

மணிரத்னம் ஒரு மகத்தான இயக்குனர்


நாலு பாட்டு , ஐந்து சண்டை அப்புறம் கொஞ்சம் காமடி என்று போய்கொண்டிருக்காமல் தன்னுடைய இயக்குனர் பாதையை சிறப்பாக அமைத்து கொண்ட இயக்குனர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர் இந்த மணியானவர் .
அவருடைய படங்களில் மௌன ராகம் , நாயகன் , தளபதி (கொஞ்சம் கமஷியல் கலந்தாலும்) ரோஜா , பாம்பே , கன்னத்தில் முத்தமிட்டால் ... போன்றவே அவரை உலக அளவில் மிக சிறந்த இயக்குனர்களுள் ஒன்றாக மாற்றி விட்டது எனலாம்.

அவர் கதையை கையாளும் விதத்தில் ஒரு மென்மையும் இருப்பதால்தான் ராம் கோபால் வர்மாவை விட கொஞ்சம் மேலே இருப்பதாக தெரிகிறது. அவர் படத்தின் நாயகன் , நாயகிகள் உடைகள் அவர்களின் பாத்திர படைப்புகளுக்கு மிக சரியாக இருப்பதும் அவரின் வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று எனலாம்.

அதேப்போல் இளைய ராஜாவின் பாடல்களுக்கு அவரின் காட்சியமைப்பு அதையொரு கவிதையாக்கி விடுவதை காணலாம்.

மணிரத்தினம் அவர்களின் படங்களை இனி வரும் பதிவுகளில் நான் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

பழைய சோறுதான் கொஞ்சம் சூடு படுத்தி தருகிறேன்.

2 comments:

sarvan said...

Good post. keep going!

payapulla said...

Thank you sarvan.

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா