Thursday, January 7, 2010

சிங்களவர்களின் ஆதிக்கம் சென்னையிலும் - ஒரு சம்பவம் .

நான் சமீபத்தில் பெங்களூரு போகலாம் என்று ஒரு ஆம்னி பேருந்தில் டிக்கெட் புக் பண்ணி இருந்தேன் . பயணம் செய்யும் அன்று வண்டியில் ஏறினால் வண்டியின் முதல் வரிசை தொடங்கி ஒரு எட்டு வரிசையில் காட்டு மிராண்டிகளை போன்ற ஒரு கும்பல் உட்கார்ந்து காச் மூச் என் பேசி கொண்டிருந்தது.

வண்டியில் ஏறும்போதே ஒருவன் எதிரில் தொடையின் பெரும் பகுதி தெரிய அரை டவுசர் போட்டு கொண்டும் தான் போட்டிருந்த டி ஷர்டை நெஞ்சு வரைக்கும் தூக்கி விட்டும் தொப்புளை காட்டி உட்கார்ந்து கொண்டிருந்தான் .

என்னுடைய சீட்டான ஐந்தாம் எண் சீட்டும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது . என்னுடைய சீட்டில் ஒரு குண்டு கொழுக்கட்டையாக ஒருவனும் இன்னொரு வனும் உட்கார்ந்து இருந்தனர் . இது என்னுடைய சீட்டு என்று சொல்லியும் கேட்காமல் உட்கார்ந்து இருந்தனர் . நான் பஸ்சின் கிளினரிடம் சொல்லி அவன் வந்து சொன்ன பிறகும் வேண்டா வெறுப்புடன் ஒருவன் எழுந்து போனான் அனால் அந்த குண்டு கொழக்கட்டை யோ வேண்டும் என்று இரண்டு சீட்டையும் அடைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தான் .

அவர்களில் பெருபாலானவர்கள் அரை டிராயர் டி ஷர்ட் என எதோ கபடிவிளையாட வந்தவர்களைப் போன்று இருந்தனர். எனக்கு அந்த குண்டனின் பக்கத்தில் உட்கார விருப்பமே இல்லாததால் திரும்ப வந்து விட்டேன் . இதை விட கொடுமை தனியாக வந்த ஒரு பெண்ணும் என்ன செய்வது என்று உட்கார மனமில்லாமல் இருந்தார் . நான் அடுத்த பஸ்ஸில் செல்வதாக சொன்னதும் அவரும் அடுத்த பஸ்ஸில் வந்தார்.

அந்த சிங்களவர்கள் அந்த பெண் உட்கார கொஞ்சம் கூட இடம் தராமல் , அதாவது முன் சீட்டை விட்டு எழுந்து போக வேண்டும் . ஆனால் நாங்கள் குருப்பாக வந்துள்ளோம் இல்லாவிட்டால் நாங்கள் வேறு பஸ்ஸில் போகிறோம் என்று கூறி கொண்டிருந்தனர்.

நான் முதலில் அவர்களை வட நாட்டவர் பீகார் போன்ற மாநிலத்தில் இருந்து வந்து இருக்கலாம் என்று தான் எண்ணினேன் கீழே இறங்கி வந்த போது தான் சொன்னார்கள் அவர்கள் சிங்களவர்கள் என்று.

தமிழகத்திலேயே இத்தனை ஆட்டம் போடும் இந்த காட்டு மிராண்டிகள் இலங்கையில் எப்படி நடந்து கொள்வார்கள் என நினைத்து கொண்டேன். தமிழகத்தில் கூட என உரிமையை நிலை நாட்ட முடிய வில்லை .

இலங்கையில் .....???


.....

No comments:

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா