Wednesday, February 3, 2010

எனக்கும் கவிதை எழுத ஆசை

வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
கவிதையை விதைத்தவன் எதை அறுப்பான் ?
கழுத்தை .

இந்த கவிதையை என்னுடைய பள்ளிகூட நாட்களில் படித்தது .

எனக்கும்

ரோட்டில் ஒருவன் போய் கொண்டிருந்தான்
அவன் வயிறு ஒட்டி
கண்களும் உள்ளபோய்
எலும்புகள் மட்டும் மூடப்பட்டிருந்தது
தோல்களால்
நான் ஏதாவது கொடுக்க நினைத்தேன்
என் கையிலும் காசு இல்லை
மனது ஈர மாகியது
அதோ தூர தெரியும் காய்ந்த பனை மரங்களாய்
நாங்கள் இருவரும் .

என்பதை போன்ற புரிந்தும் புரியாத கவிதைகளை எழுதி உங்களையும் குழப்பி நானும் குழம்ப ஆசைதான் . விதி யாரை விட்டது .

என்னுடைய சிறு வயதில் கவிதை எழுதுவதும் , படிப்பதும் மிகவும் பிடித்த மான விஷயங்களாக இருந்தது . ஐந்தாவது படிக்கும் போது "எங்க விட்டு பாப்பா அழுவாத பாப்பா தூங்காத பாப்பா" என்பதை போன்று கவிதை எழுதியது உண்டு .

கல்லூரி இதழில்"
செந்தமிழ் தாயே உன்னை
சிறப்பு மிகு சீராட்டி
வனப்பு மிகு வாழ வைக்க ஆசைதான்
ஆனால் ஆசை மிகு வாழ்க்கை நான் வாழ
ஆங்கில மனைவி எனக்கு தேவை
ஆதலால்
மன்னிப்பாய இந்த
மானங்கெட்ட தமிழ் மகனை "

என்றும் கிறுக்கியது உண்டு . பிறகு 1995 ல் பாக்கியா வார இதழில் வரதட்சணையை பற்றி நான்எழுதிய
"விலைமகன் " கவிதை என்னுடைய போட்டோவுடன் வந்ததும் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .(அதற்கான பரிசு தொகையான ரூ 101 இன்னும் வந்து சேரவில்லை ) இந்த உலகிலே நான்தான் மிகப்பெரிய கவிப் பேரரசு என்பதாய் நினைத்து கொண்டிருந்தேன் . ஆனால் நாளாக நாளாக வார இதழ்களில் கவிதையாக வருபவற்றை படித்ததில் கவிதை மேல் இருந்த ஆர்வம் போயே விட்டது . தவிர கவிதை எழுதுபவர்கள் என்றால் தாடி வைத்து ஜோல்னா பை மாட்டுபவர்கள் என்கிற எண்ணமும் கவிதை அலர்ஜியை உண்டாக்கியது .

ஆனால் இப்போது பவர்களின் பதிவுகளில் வரும் கவிதைகளை படிக்கும் போது எனக்கு திரும்பவும் கவிதையின் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகியுள்ளது .

நன்றி கவிதை பதிவர்களே.

ஸோ இனிமேல் நானும் கவித கவித என்று புலம்பலாம் .

....

2 comments:

ரிஷபன் said...

வாங்க கவிதை பழகலாம்

settaikkaran said...

கவிதை எழுதுறது ரொம்ப ஈஸிண்ணே! ஸ்டார்ட் பண்ணிட்டா நிறுத்தவே முடியாது. ஸ்டார்ட் மீஜிக்....!

Post a Comment

வாங்கோன்னா... அட .. வாங்கோன்னா